Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடத்தப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட படுகொலை செய்யப்பட்டு மட்டக்களப்பு எருமை தீவில் புதைப்பு; முன்னாள் கடற்படை சிப்பாய் தெரிவிப்பு

கடத்தப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட படுகொலை செய்யப்பட்டு மட்டக்களப்பு எருமை தீவில் புதைப்பு; முன்னாள் கடற்படை சிப்பாய் தெரிவிப்பு

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இராணுவத்தினரால் கடத்தப்பட்ட பிரபல சிங்கள ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட படுகொலை செய்யப்பட்டு, மட்டக்களப்பு எருமை தீவில் புதைக்கப்பட்டுள்ளதாக கண்கண்ட சாட்சியான முன்னாள் கடற்படை வீரர் பரபரப்புத் தகவல்களை சிங்கள மொழி யூடியூப் ஊடகவியலாளரான சுதந்த திலகசிறியின் சுதா கிரியேசன்ஸ் சேனலில் நேற்று முன்தினம் (29) வெளியிட்டுள்ளார்

சிங்கள மொழி யூடியூப் ஊடகவியலாளரான சுதந்த திலகசிறியின் சுதா கிரியேசன்ஸ் TALK With sudaththa சேனலில் நேற்று முன்தினம் (29) மாலை நடைபெற்ற குறித்த நேர்காணல் நிகழ்ச்சியில் தற்போதைக்கு வெளிநாட்டில் வசிக்கும், இலங்கைக் கடற்படையின் முன்னாள் சிப்பாயான பிரியசாந்த என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு கலந்து கொண்ட உரையாடல் ஒன்றின் மூலம் இந்த தகவல்ககளை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இவர் முன்னர் திருகோணமலையில் உள்ள கடற்படையின் மெக்கானிக்கல் பிரிவில் சிப்பாயாக கடமையாற்றிய நிலையில் அவரை தண்டனை ஒன்றில் இடமாற்றம் செய்யப்பட்டு மட்டக்களப்பு நகரிலுள்ள கடற்படை முகாமில் கடமையாறி வந்ததாகவும், அப்போது பிரகீத் எக்னெலிகொடவைக் கடத்திச் சென்ற குழுவில் எதிர்பாராதவிதமாக தானும் இணைக்கப்பட்டிருந்ததாகவும், அவரைக் கடத்திச் சென்ற போது அவர் ஊடகவியலாளர் என்பதோ, பிரகீத் எக்னெலிகொட என்பதோ தனக்குத் தெரிந்திருக்கவில்லை எனவும்,
பின்னர் மட்டக்களப்பு கடற்படை முகாமிற்கு கட்டப்பட்ட நிலையில் கொண்டுவரப்பட்ட அவரை படகில் ஏற்றப்பட்டு எருமைத் தீவுக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் அவரை செயலாளர் ஒருவரின் உத்தரவின் பேரிலேயே ரில்வான் எனப்படும் சிப்பாய் அவரின் தலையில் மூன்று துப்பாக்கிச் சூடுகள் நடத்தி படுகொலை செய்யப்பட்டு, அங்கு நிலத்தில் புதைக்கப்பட்டார் எனவும் பின் குறித்த படுகொலை நடத்தப்பட்டதாக அதற்குப் பொறுப்பாக இருந்த உயரதிகாரி தன்னிடம் தெரிவித்ததாகவும் கடற்படைச் சிப்பாய் பிரியசாந்த தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

பிரகீத் எக்னெலிகொடவின் தலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய ரில்வான் எனப்படும் கொலையாளியும் பின்னொரு காலத்தில் மர்மமான முறையில் வாகன விபத்தொன்றில் கொல்லப்பட்டதாகவும் அவர் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டதாக நம்பப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் சம்பவத்தில், முதன்முறையாக அவர் படுகொலை செய்யப்பட்டதாக நம்பகமான ஒரு தகவல் முதல்தடவையாக கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தன் உயிரை தியாகம் செய்து செல்ல நாயை காப்பாற்றிய பெண்; கொலம்பியாவில் நெகிழ்ச்சி சம்பவம்!
செய்திகள்

தன் உயிரை தியாகம் செய்து செல்ல நாயை காப்பாற்றிய பெண்; கொலம்பியாவில் நெகிழ்ச்சி சம்பவம்!

August 17, 2026
சிறிய பிரதேச சபைகளுக்கு வழங்கப்படும் நிதி அளவிலேயே அதிக மக்கள் தொகையை கொண்ட கல்முனைக்கும் நிதி வழங்கப்படுவது நடைமுறையில் உள்ள குறைபாடாகும் : கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி
செய்திகள்

சிறிய பிரதேச சபைகளுக்கு வழங்கப்படும் நிதி அளவிலேயே அதிக மக்கள் தொகையை கொண்ட கல்முனைக்கும் நிதி வழங்கப்படுவது நடைமுறையில் உள்ள குறைபாடாகும் : கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி

August 17, 2026
மட்டு மாநகர சபை வழங்கிய நியமனங்கள் தொடர்பில் ஈ.பி.டி.பி முறைப்பாடு
காணொளிகள்

மட்டு மாநகர சபை வழங்கிய நியமனங்கள் தொடர்பில் ஈ.பி.டி.பி முறைப்பாடு

August 17, 2026
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் கொடியேற்றம்!
செய்திகள்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் கொடியேற்றம்!

August 17, 2026
GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் வசதி; சாரதிகளுக்கு பொலிஸார் முக்கிய அறிவிப்பு!
செய்திகள்

GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் வசதி; சாரதிகளுக்கு பொலிஸார் முக்கிய அறிவிப்பு!

August 17, 2026
சுமார் 1 பில்லியன் டொலர் பணம் சட்டவிரோதமாக வெளிநாடு கடத்தல்; நான்கு வங்கி முகாமையாளர்கள் கைது!
செய்திகள்

சுமார் 1 பில்லியன் டொலர் பணம் சட்டவிரோதமாக வெளிநாடு கடத்தல்; நான்கு வங்கி முகாமையாளர்கள் கைது!

August 17, 2026
Next Post
மனுஷ நாணயக்கார குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்?

மனுஷ நாணயக்கார குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.