Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடத்தப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட படுகொலை செய்யப்பட்டு மட்டக்களப்பு எருமை தீவில் புதைப்பு; முன்னாள் கடற்படை சிப்பாய் தெரிவிப்பு

கடத்தப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட படுகொலை செய்யப்பட்டு மட்டக்களப்பு எருமை தீவில் புதைப்பு; முன்னாள் கடற்படை சிப்பாய் தெரிவிப்பு

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இராணுவத்தினரால் கடத்தப்பட்ட பிரபல சிங்கள ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட படுகொலை செய்யப்பட்டு, மட்டக்களப்பு எருமை தீவில் புதைக்கப்பட்டுள்ளதாக கண்கண்ட சாட்சியான முன்னாள் கடற்படை வீரர் பரபரப்புத் தகவல்களை சிங்கள மொழி யூடியூப் ஊடகவியலாளரான சுதந்த திலகசிறியின் சுதா கிரியேசன்ஸ் சேனலில் நேற்று முன்தினம் (29) வெளியிட்டுள்ளார்

சிங்கள மொழி யூடியூப் ஊடகவியலாளரான சுதந்த திலகசிறியின் சுதா கிரியேசன்ஸ் TALK With sudaththa சேனலில் நேற்று முன்தினம் (29) மாலை நடைபெற்ற குறித்த நேர்காணல் நிகழ்ச்சியில் தற்போதைக்கு வெளிநாட்டில் வசிக்கும், இலங்கைக் கடற்படையின் முன்னாள் சிப்பாயான பிரியசாந்த என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு கலந்து கொண்ட உரையாடல் ஒன்றின் மூலம் இந்த தகவல்ககளை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இவர் முன்னர் திருகோணமலையில் உள்ள கடற்படையின் மெக்கானிக்கல் பிரிவில் சிப்பாயாக கடமையாற்றிய நிலையில் அவரை தண்டனை ஒன்றில் இடமாற்றம் செய்யப்பட்டு மட்டக்களப்பு நகரிலுள்ள கடற்படை முகாமில் கடமையாறி வந்ததாகவும், அப்போது பிரகீத் எக்னெலிகொடவைக் கடத்திச் சென்ற குழுவில் எதிர்பாராதவிதமாக தானும் இணைக்கப்பட்டிருந்ததாகவும், அவரைக் கடத்திச் சென்ற போது அவர் ஊடகவியலாளர் என்பதோ, பிரகீத் எக்னெலிகொட என்பதோ தனக்குத் தெரிந்திருக்கவில்லை எனவும்,
பின்னர் மட்டக்களப்பு கடற்படை முகாமிற்கு கட்டப்பட்ட நிலையில் கொண்டுவரப்பட்ட அவரை படகில் ஏற்றப்பட்டு எருமைத் தீவுக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் அவரை செயலாளர் ஒருவரின் உத்தரவின் பேரிலேயே ரில்வான் எனப்படும் சிப்பாய் அவரின் தலையில் மூன்று துப்பாக்கிச் சூடுகள் நடத்தி படுகொலை செய்யப்பட்டு, அங்கு நிலத்தில் புதைக்கப்பட்டார் எனவும் பின் குறித்த படுகொலை நடத்தப்பட்டதாக அதற்குப் பொறுப்பாக இருந்த உயரதிகாரி தன்னிடம் தெரிவித்ததாகவும் கடற்படைச் சிப்பாய் பிரியசாந்த தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

பிரகீத் எக்னெலிகொடவின் தலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய ரில்வான் எனப்படும் கொலையாளியும் பின்னொரு காலத்தில் மர்மமான முறையில் வாகன விபத்தொன்றில் கொல்லப்பட்டதாகவும் அவர் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டதாக நம்பப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் சம்பவத்தில், முதன்முறையாக அவர் படுகொலை செய்யப்பட்டதாக நம்பகமான ஒரு தகவல் முதல்தடவையாக கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கைது செய்யப்பட்ட வசந்த கரன்னாகொடவுக்கு பிணை
செய்திகள்

கைது செய்யப்பட்ட வசந்த கரன்னாகொடவுக்கு பிணை

July 3, 2026
கல்முனையில் டெங்கு தாக்கம் ஏற்படாத வகையில் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை
செய்திகள்

கல்முனையில் டெங்கு தாக்கம் ஏற்படாத வகையில் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

July 3, 2026
தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்தித்து ஈழமக்களின் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடிய தமிழ்த் தேசியப் பேரவை
அரசியல்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்தித்து ஈழமக்களின் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடிய தமிழ்த் தேசியப் பேரவை

July 3, 2026
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 57000 ஐ கடந்தது!
செய்திகள்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 57000 ஐ கடந்தது!

July 3, 2026
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை 12 மணி நேர நீர்வெட்டு!
செய்திகள்

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை 12 மணி நேர நீர்வெட்டு!

July 3, 2026
பலாலி கடலில் அம்மன் சிலையொன்று கரையொதுங்கியுள்ளது
செய்திகள்

பலாலி கடலில் அம்மன் சிலையொன்று கரையொதுங்கியுள்ளது

July 3, 2026
Next Post
மனுஷ நாணயக்கார குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்?

மனுஷ நாணயக்கார குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.