இரத்தினபுரியில் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவர் கொடகவளை பொலிஸாரால் நேற்று முன்தினம் (02) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொடகவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் கொடகவளை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் கடமையாற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவர் ஆவார்.

சந்தேக நபரான பொதுச் சுகாதாரப் பரிசோதகரிடமிருந்து 1,800 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதற்கு முன்னரும் சந்தேக நபரின் வீட்டிலிருந்து கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் கொடகவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.