Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரணில்- சஜித் இணைவு; ரவூப் ஹக்கீமிற்கு விருப்பம்

ரணில்- சஜித் இணைவு; ரவூப் ஹக்கீமிற்கு விருப்பம்

4 months ago
in அரசியல், செய்திகள்

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் இணைவது காலத்தின் கட்டாயமாக உள்ள நிலையில், இருதரப்பும் இணையும் பட்சத்தில் நாம் முழுமனதோடு வரவேற்போம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ரணில்,சஜித் ஆகியோரை இணைப்பது குறித்து தீவிரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக்கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியையும், எமது கூட்டணியின் பிரதான கட்சியான சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியையும் இணைப்பதற்கான நடவடிக்கைகளை நானும், மனோகணேசனும் ஏலவே முன்னெடுத்திருந்தோம்.

இதற்காக அவர்களிடத்தில் பல்வேறு சந்திப்புக்களை நடத்தியிருந்ததோடு இணைந்து செயற்பட வேண்டியமைக்கான காரணத்தினையும் எடுத்துக் கூறியிருந்தோம்.

எனினும் கடந்த காலங்களில் இரு தலைவர்கள் மத்தியிலும் காணப்பட்ட தலைமைத்துவம் உள்ளிட்ட சில முக்கிய விடயங்களில் விட்டுக்கொடுப்பற்ற நிலைமையால் அந்த முயற்சிகள் கைகூட முடியாது போயிருந்தது.

ஆனால், தற்போது, ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்களின் கிடைத்த பெறுபேறுகளை அடுத்து இரு தலைவர்களுக்கும் ஏற்பட்டுள்ள ஞானோதயம் அவர்கள் இணைந்து செயற்படுவதற்கான கட்டாயத்தை உணர்த்தியுள்ளது.

ஆகவே, இரு தரப்பினரும் இணைந்து செயற்படுவதற்கான பேச்சுக்கள் முன்னெடுக்கப்படுவதற்கு இரு தரப்பு அரசியல் கட்சிகளினதும் உயர்மட்டக்குழுக்களை நியமித்துள்ளன.

ஆதனடிப்படையில் எதிர்காலத்தில் பேச்சுக்களை முன்னெடுத்து இரு தரப்பினரும் இணைந்து செயற்படுகின்றபோது அதனை நாம் முழுமையாக வரவேற்பததோடு அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு தயாராகவே உள்ளோம்.

அடுத்துவருகின்ற தேர்தல்களை கையாள்வதற்கு இவ்விரு கட்சிகளும் இணைந்து வியூகத்துடன் செயற்பட வேண்டியது மிகவும் அவசியம் என்பது எமது நிலைப்பாடக உள்ளது என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

21 கோடியே 29 இலட்சம் ரூபாவை 30 சதவீத வட்டியுடன் லைக்காவிற்கு வழங்குமாரு விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவு
உலக செய்திகள்

21 கோடியே 29 இலட்சம் ரூபாவை 30 சதவீத வட்டியுடன் லைக்காவிற்கு வழங்குமாரு விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவு

June 5, 2025
சமுர்த்தி சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் ஒன்றை சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை
செய்திகள்

சமுர்த்தி சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் ஒன்றை சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை

June 5, 2025
அழகு சாதனப் பொருட்களை உண்டு காணொளி பதிவிடும் இன்ஸ்டா பிரபலம் மரணம்
உலக செய்திகள்

அழகு சாதனப் பொருட்களை உண்டு காணொளி பதிவிடும் இன்ஸ்டா பிரபலம் மரணம்

June 5, 2025
செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்த நிதி ஒதுக்கீடுவதாக நீதி அமைச்சர் உறுதி
செய்திகள்

செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்த நிதி ஒதுக்கீடுவதாக நீதி அமைச்சர் உறுதி

June 5, 2025
உதய கம்மன்பிலவுக்கு எதிரான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்
செய்திகள்

உதய கம்மன்பிலவுக்கு எதிரான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்

June 5, 2025
காணொளிகள்

வடமாகாண அரச வைத்தியசாலைகளுக்கு மக்கள் வழங்கும் நன்கொடைகளில் மோசடியா?

June 5, 2025
Next Post
மூன்று பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 29 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மூன்று பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 29 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.