Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிரான் பிரதேச வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்ப் போயிருந்த இருவர் சடலமாக மீட்பு

கிரான் பிரதேச வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்ப் போயிருந்த இருவர் சடலமாக மீட்பு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

நேற்று சனிக்கிழமையன்று மாலை (25) இவர்கள் கோராவெளியில் உள்ள தங்களது சேனைக்கு சென்றவேளை கோராவெளி புலிபாய்ந்த கல் வீதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கண்ணகி அம்மன் கோயில் வீதி கிரானைச் சேர்ந்த கா.குருபரன் (53-வயது), திகிலிவெட்டை சந்திவெளியைச் சேர்ந்த மா.விநாயகமூர்த்தி (71-வயது) என்ற முதியவருமே இவ்வாறு வெள்ளத்தில் காணாமல் போயுள்ளனர். இவர்களை தேடும் பணியில் பொதுமக்கள் பொலிசார் மற்றும் பிரதேச இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது குறித்த இரு சடலங்களும் இன்று (26) ஞாயிற்றுக்கிழமை காலை கண்டு பிடிக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மரண விசாரணைகளின பின்னர் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கோறளைப்பற்று பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வ. இரமேஷ் ஆனந்தன் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த கிரான் புலிபாய்ந்த கல் வீதியில் வெள்ள நீரானது இதுவரை வழிந்தோடவில்லை. இதனால் குறித்த பிரதேசத்திற்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டு காணப்படுவதனால், பிரதேச செயலகத்தினால் பொதுமக்களின் நன்மை கருதி படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரால் வெள்ள அபாயம் தொடர்பாக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற அறிவித்தல்களும் வழங்கப்பட்டிருந்தன. இவ்வாறான நிலையில் இவ் உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!
செய்திகள்

புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!

June 9, 2026
30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு

June 9, 2026
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால
செய்திகள்

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால

June 9, 2026
வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!
செய்திகள்

வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!

June 9, 2026
50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!
செய்திகள்

50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!

June 9, 2026
கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் அசத்தல் சாதனை
செய்திகள்

கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் அசத்தல் சாதனை

June 9, 2026
Next Post
குழந்தைகளுக்கு பென்சில் வாங்கிக்கொடுக்கும் பெற்றோர்களின் கவனத்திற்கு

குழந்தைகளுக்கு பென்சில் வாங்கிக்கொடுக்கும் பெற்றோர்களின் கவனத்திற்கு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.