Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கோட்டைக்கல்லாறு கடற்கரையில் கவனிப்பாரின்றி கிடக்கும் மீனவர் தங்குமடமும் எரிபொருள் நிரப்பு நிலையமும்

கோட்டைக்கல்லாறு கடற்கரையில் கவனிப்பாரின்றி கிடக்கும் மீனவர் தங்குமடமும் எரிபொருள் நிரப்பு நிலையமும்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கடந்த 2012ஆம் ஆண்டு மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு கடற்கரையில் அமைக்கப்பட்ட மீனவர் தங்குமடமும் எரிபொருள் நிரப்பு நிலையமும் இன்று வரை கவனிப்பாரற்று தூர்ந்துபோகும் நிலையில் காணப்படுவதோடு, அங்குள்ள பொருட்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் காணாமல்போவதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மீனவர் தங்குமடமும் எரிபொருள் நிரப்பு நிலையமும் சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியில் கட்டப்பட்டவை ஆகும்.

மக்களின் சொத்துக்கள் இனியும் கள்வர்களால் சூறையாடப்பட இடமளிக்காமல், மீனவர் தங்குமடத்தையும் எரிபொருள் நிரப்பு நிலையத்தையும் புனர்நிர்மானம் செய்து, சீரமைத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கையளிக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் அரசிடம் கோருகின்றனர்.

தற்போது எமது மீனவர் தங்குமடமும் எரிபொருள் நிரப்பு நிலையமும் அழிவடைந்த நிலையில், தூர்ந்துபோய், துருப்பிடித்து காணப்படுகின்றன.

இனியும் இவற்றை அழியவிடாமல், துறை சார்ந்த திணைக்களத்தினரும் அரசாங்கமும் தூர்ந்துபோயுள்ள மீனவர் தங்குமடத்தையும் இயங்காதிருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையத்தையும் உடன் புனரமைத்துத் தாருங்கள் என மீனவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தங்குமடமும் எரிபொருள் நிரப்பு நிலையமும் புனரமைக்கப்படும் பட்சத்தில் எமக்கு மாத்திரமின்றி, இப்பகுதியில் உள்ள சுமார் 5000 மீனவர்களுக்கு இது நன்மையாக அமையும் என்றும் தெரிவிக்கின்றனர்.

இந்த அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்பட்டு தற்போது 13 வருடங்கள் ஆகிவிட்டன. தற்போது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள உதிரிப்பாகங்கள் களவாடப்பட்டுள்ளன. ஏனையவை துருப்பிடித்த நிலையில் உள்ளன. நாட்டின் புதிய அரசாங்கமும் ஜனாதிபதியும் மக்களுக்கான நற்செயற்றிட்டங்களை நிறைவேற்றுவதற்காகவே இயங்குவதால், எமது கோரிக்கையையும் அவர்கள் நிறைவேற்றித் தரவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம் என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது
காணொளிகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது

August 2, 2026
மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி
செய்திகள்

மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி

August 2, 2026
தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை
செய்திகள்

தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை

August 2, 2026
16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்
செய்திகள்

16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்

August 2, 2026
மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

August 2, 2026
அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்
செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்

August 2, 2026
Next Post
தனக்குக் கிடைக்க வேண்டிய இழப்பீட்டை ஏழைகளுக்கு உதவப் பயன்படுத்தப் போவதாகக் கூறியுள்ள சுஜீவ சேனசிங்க

தனக்குக் கிடைக்க வேண்டிய இழப்பீட்டை ஏழைகளுக்கு உதவப் பயன்படுத்தப் போவதாகக் கூறியுள்ள சுஜீவ சேனசிங்க

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.