பிரதமர் ஹரினி அமரசூரிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு இன்று காலை விஜயம் செய்துள்ளார்.
இதன்போது, கல்லூரியின் அதிபர் மற்றும் மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.
கல்லூரி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடிய பிரதமர் அவர்களின் தேவைகளை கேட்டறிந்து கொண்டார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-569.png)
கல்லூரி அருங்காட்சியகம், மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளையும் பிரதமர் பார்வையிட்டதுடன், அங்கு விசேட உரையொன்றையும் நிகழ்த்தியிருந்தார்.
மேலும், இந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் ஹரினிக்கு கல்லூரியின் அதிபரால் நினைவுப் பரிசொன்றும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-570.png)
இந்த நிகழ்வின்போது, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, பிரதமர் ஹரினி அமரசூரிய யாழ்ப்பாணத்தில் இன்று பல்வேறு நிகழ்வுகளிலும் பொதுமக்கள் சந்திப்புக்களிலும் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-571.png)
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-572.png)
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-573.png)
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-574.png)
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-575.png)
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-576.png)