Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஊடகவியலாளர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் குரல்கொடுக்க வேண்டும்; ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் வேண்டுகோள்!

ஊடகவியலாளர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் குரல்கொடுக்க வேண்டும்; ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் வேண்டுகோள்!

3 years ago
in செய்திகள்

ஊடகவியலாளர்கள் பொதுமக்களுக்காகவே தமது உயிரை தியாகம் செய்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்படும் போது பொது மக்களும் தமது எதிர்ப்பை வெளியிடவேண்டும் என இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் துமிந்த சம்பத் தெரிவித்தார்.

மருதானை சி.எஸ்.ஆர். நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்
போதே அவர் இவ்வாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்-ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர போன்று ஊடக வியலாளர்கள் தாக்கப்படுவது இது முதல்முறையல்ல.ஊடக சுதந்திரம் தொடர்பிலானஇலங்கையின் வரலாறு கரும்புள்ளியாகவே உள்ளது.ஊடகவியலாளர்களை மிகவும் மிலேச்சத்தனமாக நடத்தும்நாடாகவே இலங்கையை உலகம் பார்க்கிறது.

தரிந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலானது அவர் கைதுசெய்யப்பட்டதற்கும் அப்பால் சென்றதொரு விடயமாகும்.கைதுசெய்யப்படுவது ஒரு நிகழ்ச்சி நிரலாக இருந்த போதிலும் இங்கு அவர்மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட் டுள்ளது. இதனை வன்மையாககண்டிக்கிறோம்.தொழிற்சங்கங்களும், சிவில்
அமைப்புகளும், ஊடகவியலாளர்களும் நாட்டு மக்களில் ஒருபகுதியாகும்.

ஊடகவியலாளர்கள் தமது உயிரை தியாகம் செய்துதான் மக்களுக்காக தகவல்களை திரட்டி வழங்குகிறார்கள். இவர் களுக்கு எதிராக அதிகாரத்தை பிரயோகிக்கும் போது மக்கள் எழுச்சிக்கொள்ள வேண்டும்.பொலிஸாருக்கு இந்த நாட்டின் பிரச்னைகள் குறித்து தெரி
யாதா? அவர்களுக்கு இந்த சமூகத்தின் மீது அக்கறை இல்லையா?.இவ்வாறு சமூக சமத்து வத்துக் கும் மக்களின் பிரச்னைகளுக்கு எதிராக குரல்கொடுப்பவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானதுதான்.மக்களுக்கு தகவல்களை திரட்டி வழங்குவபவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது மிகவும் கவலைக்குரியதாகும்.

ஊடகவியலாளர்கள்மீது தாக்குதல்கள் நடைபெறும் சந்தர்ப்பங்களில் மக்கள் அதற்கு எதிராக தமது எதிர்ப்பை வெளியிட வேண்டும்.எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை, லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை, சிவராம் படுகொலை
செய்யப்பட்டமை, போத்தல ஜெயந்த மீது தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் கடந்தகாலங்களில் ஊடக நிறுவனங்கள்மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன் அவை எரியூட்டப்பட்டன.

இந்த சம்பவங்கள் எதற்கும் இன்னமும் நீதி கிடைக்கவில்லை.இவைதான் தவறான முன்னுதாரணங்கள். வரலாற்றில் இடம் பெற்ற சம்பவங்கள் மற்றும் சமகாலத்தில் இடம்பெறும் சம்பவங்களுக்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும் – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது
செய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

July 28, 2026
வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
Next Post
வெளிநாடு செல்லும் இளைஞர்களிடம் கப்பம் பெறும் அதிகாரிகள்; கட்டுநாயக்க விமான நிலையம் தொடர்பில் விசாரணை!

வெளிநாடு செல்லும் இளைஞர்களிடம் கப்பம் பெறும் அதிகாரிகள்; கட்டுநாயக்க விமான நிலையம் தொடர்பில் விசாரணை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.