Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்டத்தில் நலிவடைந்து செல்லும் பால் உற்பத்தி

மட்டக்களப்பு மாவட்டத்தில் நலிவடைந்து செல்லும் பால் உற்பத்தி

2 years ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மேச்சல்தரை இன்மைக்கும் முகம்கொடுத்துக் கொண்டு நூற்றுக்கு மேற்பட்ட கால்நடைகளைக் கொண்டு பெரும் பட்டி பட்டியாக தமது கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வரும் பண்ணையாளர்கள் ஒருபுறமிருக்கின்றார்கள். அதுபோல் தத்தமது வீடு வளவுகளிற்குள்ளும், கொட்டகைகள் அமைத்து தமது வீட்டுக் பிள்ளைகளைப்போல் தீனிபோட்டுக் கொண்டு கால்நடைவளர்ப்பிலும் அதிகளவு பண்ணையாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஈடுபட்டு வருவதைக் காணமுடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டம் வருடாந்தம் எதிர்கொள்ளும் வெள்ளப்பெருக்கினால் விவசாயச் செய்கை மாத்திரமின்றி, கால்நடை வளர்ப்பும் வருடாந்தம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றது. இதனால் வருடாந்தம் மாவட்டத்திலுள்ள கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுவரும் மக்களின் வாழ்வாதாரம் “சாண்ஏற முழம் சறுக்குவது” போன்று காலத்திற்கு காலம் நலிவடைந்து வருவதாக கால்நடைவர்ப்பில் ஈடுபட்டு தமது வாழ்வாதாரத்திற்குப் போராடி வரும் பண்ணையார்கள் அங்கலாய்க்கின்றனர்.

இது தொடர்பில் ஒரு பண்ணையாளர் தெரிவிக்கையில்,

எனது பிள்ளையார் பாற் பண்ணையில் 475இற்கு மேற்பட்டவர்கள் அங்கத்துவம் வைகிக்கின்றார்கள். ஆனால் தற்போது 65இற்குட்பட்டவர்கள்தான் பால் கறக்கிறார்கள். அனைவரும் கடந்த காலங்களில் இருந்து மிகவும் ஆர்வத்துடன் கால்நடை வளர்ப்புக்களில் ஈடுபட்டு வந்தனர். எனினும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாலுக்கான விலை தளம்பல் காரணமாகவும், கால்நடைகளுக்குரிய தீவனங்களின் விலை உயர்வு காரணமாகவும், பால் உற்பத்தி படிப்படியாக குறைவடைந்துள்ளது.

தினமும் எமது பால் சேகரிப்பு நிலையத்திற்கு குறைந்தது 500 தொடக்கம் 600 லீட்டர் பால் நாங்கள் சேகரிப்போம். இப்போது 200 தொடக்கம் 220 லீட்டர் வரையான பால்தான் எமக்கு கிடைக்கப் பெறுகின்றன.

இந்த அளவிற்குதான் பண்ணையாளர்கள் பால்உற்பத்தியை மேற்கொள்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம். பால்லுற்பத்தியை அதிகரித்து பாலுற்பத்தி கிராமமாக முற்று முழுதாக இந்த கிராமத்தை மாற்றுவதற்கு இவ்வாறான விடயங்களுக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் தீர்வு கண்டுதர வேண்டும் என நாம் வேண்டுகோள் விடுகின்றோம். என மீதமுள்ள பிள்ளையார் பாற்பண்ணையாளர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
Next Post
இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால்…?; ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை

இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால்…?; ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.