காஸா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கக் கோரி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் எந்த ஹமாஸ் உறுப்பினரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று டிரம்ப் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காஸா மக்கள் சிறந்த எதிர்காலத்தை விரும்புவதால், காசாவை விட்டு வெளியேறுமாறு ஜனாதிபதி ஹமாஸிடம் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.