Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் 146 பேரை தெரிவு செய்வதற்காக 455,520 பேர் வாக்களிக்கத் தகுதி

மட்டக்களப்பு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் 146 பேரை தெரிவு செய்வதற்காக 455,520 பேர் வாக்களிக்கத் தகுதி

3 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்கப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு இதுவரை 30 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்– மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பீ.எம். சுபியான்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளுராட்சி மன்றங்களின் 144 வட்டாரங்களில் இருந்து 146 பேரை தெரிவு செய்வதற்காக நேற்று புதன்கிழமை (12) பிற்பகல் 3.00 மணிவரை அரசியல்கட்சி, சுயேச்சைக்குழுக்கள் உட்பட 30 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பீ.எம். சுபியான் தெரிவித்தார்.

மாவட்ட தேர்தல் ஆணையத்தில் நேற்று புதன்கிழமை (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்,

மேலும் அவர் தெரிவிக்கையில்,

2025 ம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல பணிகளையும் ஆரம்பித்துள்ளோம். இம்முறை வாக்களிக்க 4 இலச்சத்து 55 ஆயிரத்து 520 பேர் தகுதி பெற்றுள்ளதுடன் 404 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கவுள்ளனர்.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனு கோரிக்கை தேர்தல் திணைக்கள ஆணையத்தால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய எமது மாவட்டத்தில் கடந்த 2025 ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதி ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களிலும் நோட்டிஸ் வெளியிடப்பட்டது. அதன் பிரகாரம் மார்ச் மாதம் 3 ம் திகதியில் இருந்து மாச் 19 ம் திகதி பகல் 12.00 மணிவரை அரசியல்கட்சிகள் சுயேச்சைக்குழுக்கள் கட்டுப்பணத்தை தேர்தல் அலுவலகத்தில் செலுத்தமுடியும்.

அதேவேளை உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு மார்ச் மாதம் 17 ம் திகதி தொடக்கம் 20 ம் திகதி நண்பகல் 12.00 மணிவரை மட்டக்களப்பு பழைய மாவட்ட அரசாங்க காரியாலயத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்.

மட்டக்களப்பு மாநகரசபையில் 20 வட்டாரங்களில் இருந்தும், மேலதிக உறுப்பினர்களில் இருந்தும் 33 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் இதில் 60 வாக்களிப்பு நிலையங்களில் 70 ஆயிரத்து 24 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். ஏறாவூர் நகரசபையில் 16 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 20 ஆயிரத்து 561 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா.;

இதேவேளை காத்தான்குடி நகர சபையில் 16 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 34 ஆயிரத்து 686 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், ஏறாவூர் பற்று பிரதேச சபையில் 30 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 67 ஆயிரத்து 450 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அவ்வாறே கோறளைப்பற்று பிரதேசபையில் 23 பேரை தெரிவு செய்வதற்கு 58 ஆயிரத்து 318 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு 18 பேரை தெரிவு செய்வதற்காக 24 ஆயிரத்து 659 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனனர். கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபைக்கு 18 பேரை தெரிவு செய்வதற்காக 20 ஆயிரத்து 434 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபைக்கு 20 பேரை தெரிவு செய்வதற்கு 50 ஆயிரத்து 612 பேர் தகுதி பெற்றுள்ளனர். மண்முனை பிரதேச சபையின் 16 பேரை தெரிவு செய்வதற்காக 26 ஆயிரத்து 931 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மண்முனை மேற்கு பிரதேச சபையின் 16 பேரை தெரிவு செய்வதற்காக 25 ஆயிரத்து 723 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மண்முனை தென்மேற்கு பிரதேச சபையில் 16 பேரை தெரிவு செய்வதற்காக 21 ஆயிரத்து 868 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், போரதீவு பிரதேச சபையின் 16 பேரை தெரிவு செய்வதற்காக 34 ஆயிரத்து 154 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மொத்தமாக மாவட்டத்தில் ஒரு மாநகரசபை இரண்டு நகரசபை மற்றும் 9 பிரதேசசபைகள் உட்பட 12 உள்ளுராட்சி மன்றங்களுக்கில் 144 வட்டாரங்களில் இருந்து 146 உறுப்பினர்கள் தெரிவு செய்யபடவுள்ளதுடன், மண்முனை தென்எருவில்பற்று களுவாஞ்சிக்குடி வட்டாரத்தில் இருந்து இரண்டு உறுப்பினர்களும், கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையில் ஒரு வட்டாரத்தில் இரண்டு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

அதேவேளை மாவட்டத்தில் தேர்தல் பிணக்குகள் தீர்க்கும் நிலையம் எதிர்வரும் 17ம் திகதி ஆரம்பமாகும், இந்த நிலையம் பழைய கச்சேரியில் இயங்கும் எனவே தேர்தல் வன்முறையுடனான முறைப்பாடுகளை நேரடியாகவே அல்லது வட்அப் இலக்கம் மூலம் அல்லது, தொலைபேசி ஊடாகவே, ஈமெயில் ஊடாகவே தெரிவிக்கமுடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பொத்துவில் வரையான கடலோரப் பகுதி மீனவர்களுக்கு பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை
செய்திகள்

பொத்துவில் வரையான கடலோரப் பகுதி மீனவர்களுக்கு பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

June 13, 2025
நுரைச்சோலை மின் நிலையத்தின் மூன்றாவது பிறப்பாக்கி செயலிழப்பு; மின் விநியோகத்தில் பாதிப்பு இல்லை என மின்சார சபை உறுதி
செய்திகள்

நுரைச்சோலை மின் நிலையத்தின் மூன்றாவது பிறப்பாக்கி செயலிழப்பு; மின் விநியோகத்தில் பாதிப்பு இல்லை என மின்சார சபை உறுதி

June 13, 2025
பயணித்துக்கொண்டிருந்த பேருந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் பாடசாலை மாணவி உட்பட இருவர் காயம்
செய்திகள்

பயணித்துக்கொண்டிருந்த பேருந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் பாடசாலை மாணவி உட்பட இருவர் காயம்

June 13, 2025
ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு என பெயர் மாற்றம்
செய்திகள்

ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு என பெயர் மாற்றம்

June 13, 2025
மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு; கார் தீக்கிரை
செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு; கார் தீக்கிரை

June 13, 2025
வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக சு.சுதாகரன் மற்றும் பிரதி தவிசாளராக கு.பத்மநீதன் தெரிவு
அரசியல்

வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக சு.சுதாகரன் மற்றும் பிரதி தவிசாளராக கு.பத்மநீதன் தெரிவு

June 13, 2025
Next Post
இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள பெண் கிராம உத்தியோகத்தவர்கள்

இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள பெண் கிராம உத்தியோகத்தவர்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.