கண்டி – கடுகண்ணாவை பிரதேசத்தில் வீதியில் பயணித்துகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் மீது மரமொன்றின் கிளை முறிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவி உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக கடுகண்ணாவை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளது.

கம்பளையிலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் மீதே மரக்கிளை முறிந்து வீழ்ந்துள்ளது.
இதன்போது பஸ்ஸில் பயணித்த பாடசாலை மாணவியும் பஸ் சாரதியும் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கடுகண்ணாவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.