Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு நீதிமன்றத்தில் நிறுத்திவைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் திருட்டு; ஆற்றுக்குள் இருந்து மீட்பு!

மட்டு நீதிமன்றத்தில் நிறுத்திவைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் திருட்டு; ஆற்றுக்குள் இருந்து மீட்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு நீதிமன்றக் கட்டடத் தொகுதி வாகனக் களஞ்சியசாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் திருட்டுப் போயிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை மூன்று மாதங்களின் பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள மட்டக்களப்பு வாவியில் இருந்து தாங்கள் மீட்டுள்ளனர் என மட்டக்களப்புத் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுணதீலு பிரதேசத்தில் கடந்த வருடம் மோட்டர் சைக்கிளில் சட்டவிரேதமாகக் கசிப்புக் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை பல்சர் ரக மோட்டர் சைக்கிளுடன் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் மோட்டர் சைக்கிளைப் பறிமுதல் செய்து, அதனை அரச உடமையாக்கியது. நீதிமன்ற வளாகத்துக்கு அருகிலுள்ள களஞ்சியசாலை பகுதியில் அது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 4 ஆம் திகதிக்கும் 8 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த மோட்டர்
சைக்கிள் திருட்டுப் போயுள்ளதாக 8 ஆம் திகதி நீதிமன்றப் பதிவாளர் மட்டக்களப்புத் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக மாவட்ட உதவி பொலிஸ் மா அதிப ரின் ஆலோசனைக்கமைய மட்டக்களப்புத் தலைமையக பொலிஸ் நிலையப் பிரதம பொறுப்பதிகாரி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜீ.எம்.பி.ஆர். பண்டாரவின் நெறிப்படுத்தலில் பெரும் குற்றத்தடுப்புப் பொறுப்பதிகாரி பொலிஸ் இன்ஸ்பெக்டர் கஜநாயக்கா தலைமையிலான பொலிஸ் குழுவினர் மற்றும் புலனாய்வு பிரவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் மேற்படி வாவியில்நேற்று இயந்திர படகு மூலம் மேற்கொண்ட தேடுதலின் போது மோட்டார்
சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.மீட்டகப்பட்ட மோட்டார் சைக்கிளை நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

உப்பை அதிக விலைக்கு விற்றால் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படும்; கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
செய்திகள்

உப்பை அதிக விலைக்கு விற்றால் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படும்; கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்

June 8, 2025
50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை அதிகரிப்பு
செய்திகள்

50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை அதிகரிப்பு

June 8, 2025
மன்னார் பொது வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்களுக்கு நீதி கோரி போராடியவர்கள் 06 மாதம் கழித்து கைது
மட்டு செய்திகள்

மன்னார் பொது வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்களுக்கு நீதி கோரி போராடியவர்கள் 06 மாதம் கழித்து கைது

June 8, 2025
தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் எலான் மஸ்க்
அரசியல்

தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் எலான் மஸ்க்

June 8, 2025
2009க்கு முன்பு வழங்கப்பட்ட 2 மில்லியனுக்கும் அதிகமான ஓட்டுநர் உரிமங்களை இரத்து செய்ய பரிந்துரை
செய்திகள்

2009க்கு முன்பு வழங்கப்பட்ட 2 மில்லியனுக்கும் அதிகமான ஓட்டுநர் உரிமங்களை இரத்து செய்ய பரிந்துரை

June 8, 2025
செம்மணி மனித புதைகுழி சொல்லும் கதைகள்; ஒரு இராணுவ வீரரின் வாக்குமூலம்!
செய்திகள்

செம்மணி மனித புதைகுழி சொல்லும் கதைகள்; ஒரு இராணுவ வீரரின் வாக்குமூலம்!

June 8, 2025
Next Post
மட்டக்களப்பில் மக்கள் முறைப்பாடுகளை பதிவிட புதிய வசதி!

மட்டக்களப்பில் மக்கள் முறைப்பாடுகளை பதிவிட புதிய வசதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.