பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தலைவர்கள் ‘படுகொலை செய்தவர்களுக்கும் கடத்தல்காரர்களுக்கும் ஆதரவாக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சியில் இரண்டு இஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் கொல்லப்பட்டமை தொடர்பில் தமது எக்ஸ் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
குறித்த நாடுகளின் தலைவர்கள் ஹமாசுடன் இணங்கி செயற்படுவதாகவும் இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.