
தற்போது நாட்டில் பெரும் சர்ச்சையில் உள்ள மற்றும் அமுல்படுத்தப்பட்டு காணப்படும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, புதிய சட்டத்தை (பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்) அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் புதிய ஒரு பயங்கரவாத தடை சட்டத்தை இயற்றும் செயற்பாட்டிற்கு பொது மக்கள் மற்றும் பொது நிறுவனங்களின் கருத்துக்களை நீதி அமைச்சு கோறுகிறது.

கடந்த 20 ஆம் திகதி இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், 14 நாட்களுக்குள் குறித்த கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் Secretary Ministry of Justice and National Integration, No. 19, Sri Sangaraja Mawatha, Colombo 10 என்ற முகவரிக்கு அனுப்பமுடியும்.
