
வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் “மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் “என்ற பதவி இரத்து செய்யப்பட்டுள்ளது.
என்ன காரணத்திற்காக குறித்த பதவி இரத்து செய்யப்பட்டது என இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிப்பு வெளிவராத நிலையில், அடுத்ததாக குறித்த பதவிக்கு யார் நியமிக்கப்படப்போகிறார் என்றகேள்வியும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

குறித்த பதவி இரத்து தொடர்பான கடிதம் பொதுநிர்வாக மாகாணசபைகள் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் அபயரத்னவினால் இது சார்ந்த தரப்பினருக்கு அனுப்பிவையப்பட்டுள்ளது.
