Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பிலிருந்து யாழிற்கு ரயில்!

மட்டக்களப்பிலிருந்து யாழிற்கு ரயில்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இந்தியாவிலிருந்து ரயில்களை கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ்முன்னெடுக்கப்படுவதுடன், அது வெற்றிகரமாக முடிவுற்றால் அடுத்த வருடத்தில் மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு புதிய ரயில் சேவையை நடத்த முடியுமென, அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வெளிநாட்டு கடன்களை செலுத்தும் நடவடிக்கைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முடிவுற்றதும், தெற்கை போன்றே வடக்கு, கிழக்குக்கும் அபிவிருத்தியில் முன்னுரிமை வழங்கப்படுமெனவும், அவர் தெரிவித்தார். மட்டக்களப்புக்கு நேற்று விஜயம் செய்த போக்குவரத்து ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, மட்டக்களப்பில் நடைபெற்ற மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், “30 வருட யுத்தம் காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் ‘வடக்கு வசந்தம்’ மற்றும் ‘கிழக்கின் உதயம்’ போன்ற வேலைத்திட்டங்கள் பெருமளவு நிதி செலவில் முன்னெடுக்கப்பட்டன. அதற்கான நிதி கடன்கள் மற்றும் உதவிகள் மூலமாகவே பெறப்பட்டன.

அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொண்டுள்ள வெளிநாட்டுக் கடன்களை நாம் இன்னும் செலுத்தி முடிக்கவில்லை. அதன் காரணமாக தற்போது நாடு பெரும்கடன் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது. அவ்வாறு கடன்களை மீளச் செலுத்துதல் மற்றும் கடன் மறுசீரமைப்பு இடம்பெறும்வரை எவ்வித வெளிநாட்டுக் கடன்களையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையே காணப்படுகிறது.

கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் அனைத்து மாகாணங்களிலுமே தற்போது அபிவிருத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், போக்குவரத்து அமைச்சின் வேலைத்திட்டங்கள் உட்பட அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் நாட்டுக்கு மீண்டும் வெளிநாட்டுக்கடன் கிடைத்தால்தான் முன்னெடுக்க முடியும். அதற்கான வேறு எந்த அரசியல் தீர்வும் கிடையாது.

2048ஆம் ஆண்டுவரை நாம் அந்தக் கடன்களை செலுத்த வேண்டியுள்ளது. எந்த தலைவரின் கீழ் நாடு ஆளப்பட்டாலும், எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், கடனை மீளச் செலுத்தும் நெருக்கடியிலிருந்து விலக முடியாது.

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம், நட்பு நாடுகளுடனும் சர்வதேச நிறுவனங்களுடனும் இணைந்துமேற்கொள்ளும் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் வெற்றிகரமாக முடிவடைந்த பின்னர் மீண்டும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

அந்த சந்தர்ப்பத்தில் தெற்கை போன்றே வடக்கு,கிழக்கு அபிவிருத்திக்கும் விசேட முன்னுரிமை வழங்கப்படும் என்றும் நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம்வரை புதிய ரயில் சேவையை ஆரம்பிக்குமாறு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் சில ரயில்களை கொள்வனவு செய்வது தொடர்பில் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த பேச்சு
வார்த்தைகள் வெற்றிகரமாக முடிவுற்றால் அடுத்த வருடத்தில் கிழக்கு மாகாண மக்களின் வேண்டுகோளை நிறைவேற்ற முடியும் என்றும், அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
Next Post
குடிபோதையில் ஈபிள் கோபுரத்தின் உச்சியில் உறங்கிய சுற்றுலா பயணிகள்!

குடிபோதையில் ஈபிள் கோபுரத்தின் உச்சியில் உறங்கிய சுற்றுலா பயணிகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.