வீதிகளில் ஏற்படும் வீதி விபத்துகளைத் தடுக்கும் நோக்கிலும், மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு, மட்டக்களப்பு மாநகர சபை சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதில் முதன்மையானதாக வீதியோர வியாபாரங்களைத் தடை செய்வதும் ஒன்று.
பெரும்பாலான வீதியோர வியாபாரிகள் நடைபாதைகள், பஸ் நிறுத்தங்கள் மற்றும் வாகனப் போக்குவரத்து அதிகம் காணப்படும் இடங்களைப் பயன்படுத்துவதால், நடைபயணிகள் சாலையின் நடுவே செல்லும் நிலை உருவாகுகிறது.
இது பெரும் விபத்துகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. இத்தகைய அனுமதியில்லா வியாபாரங்கள் வாகனங்கள் சுதந்திரமாக இயங்க வேண்டிய பாதைகளை மறைக்கும் சூழலை உருவாக்குகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல், வாகனங்களின் தாமதம் மற்றும் அவசர நிலைகளில் (ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள்) தடை ஏற்படும் அபாயங்கள் அதிகரிக்கின்றன.
பொதுமக்களின் உடல் நலனை மற்றும் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டும் இத்தடை அவசியமானது. வீதியோரத்தில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் தூசி, புகை, கழிவு நீர் போன்றவற்றால் மாசடையும் வாய்ப்பு அதிகம். இதனால் பொதுச்சுகாதாரத்திற்கு ஆபத்து உண்டாகும்.
அத்துடன், மாநகர சபை நகர அமைப்பு மற்றும் அழகியலையும் பேணுவதற்காக, ஒழுங்கமைந்த வணிகப் பகுதிகளில் வியாபாரிகள் பணி புரியும் சூழலை உருவாக்க முயற்சி செய்கிறது. இது வாணிப வளர்ச்சிக்கும், மக்களின் வசதிக்கும் சாதகமாக அமையும்.
இதனால், மக்கள் பாதுகாப்பு, சாலை ஒழுங்கு, சுகாதாரம் மற்றும் நகர அபிவிருத்தி ஆகியவற்றை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபை வீதியோர வியாபாரங்களைத் தடை செய்துள்ளது .













