Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாதுகாப்பு ஸ்டிக்கர் போலியாகப் பயன்படுத்தப்பட்டமைக்கு எதிராக பணிப்புரை வழங்கியது வழிவகைகள் பற்றிய குழு!

பாதுகாப்பு ஸ்டிக்கர் போலியாகப் பயன்படுத்தப்பட்டமைக்கு எதிராக பணிப்புரை வழங்கியது வழிவகைகள் பற்றிய குழு!

3 years ago
in செய்திகள்

ஒரு சில மதுபான உற்பத்தி நிறுவனங்களினால் பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் போலியான முறையில் பயன்படுத்தப்பட்டமையால் அரசாங்கத்துக்குப் பெருமளவு வரிவருமான இழப்பு ஏற்பட்டமை தொடர்பில் முதலில் கலந்துரையாடலை ஆரம்பித்தமை மற்றும் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை வழங்கியது வழிவகைகள் பற்றிய குழு என அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மதுபானப் போத்தல்களில் போலியான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருப்பது தொடர்பில் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சினால் பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக இலங்கை மதுவரித் திணைக்களத்தினால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான காலக்கெடு தொடர்பில் குழுவினால் பணிப்புரைகள் பல முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, போலியான பாதுகாப்பு ஸ்டிக்கர் பயன்பாட்டைத் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் போலியான ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளடங்கலான பரிந்துரைகளைக் கொண்ட வழிவகைகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை செப்டெம்பர் 06ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
Next Post
சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இலங்கை அணி!

சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இலங்கை அணி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.