Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழர் பிரதேசத்தில் தமிழில் பாடப்படாத தேசிய கீதம்; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவலை!

தமிழர் பிரதேசத்தில் தமிழில் பாடப்படாத தேசிய கீதம்; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவலை!

2 years ago
in செய்திகள்

தேசிய கீதம் தமிழில் பாடப்பாடாதது மன வருத்தத்துக்குரியது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவலை வெளியிட்டுள்ளார்.

தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் (NVQ) கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று யாழ்.சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

நான் அடிக்கடி “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்று சொல்வது போல கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவை பொருத்த வரையிலோ, அல்லது ஜனாதிபதியை பொருத்தவரையிலோ அல்லது அரசாங்கத்தின் கொள்கையை பொறுத்த வகையிலோ பாராபட்சமற்ற, இனவாதமற்ற கொள்கையில் ஒரு செயற்பாட்டை தான் அது முன்னெடுத்து வருகின்றது.

அரசாங்கத்தில் அமைச்சர் ஒரு சில பேர் இனவாதிகளாக இருக்கலாம், அல்லது இனவாத கருத்துக்களை சொல்பவர்களாக இருக்கலாம், அல்லது அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பவர்களாகவும் இருக்கலாம்.

ஆனால் அது அமைச்சரவையின் கொள்கையோ, அரசாங்கத்தின் கொள்கையோ, வேலைத்திட்டமோ அல்ல, இன்றைய இந்த நிகழ்வு தொடர்பாகவும் என்னுடைய கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகின்றேன்.

தமிழரின் பண்பாடு அல்லது தமிழர்களின் பாரம்பரியம் என்று சொல்லி இங்கு சில நிகழ்ச்சிகளை முன்னெடுத்து இருந்தார்கள்.

அதில் தேசிய கீதம் தமிழில் தான் பாடப்பட்டிருக்க வேண்டும். அது ஒரு துரதிஷ்டவசமாக அதிகாரிகள் அவ்வாறு செய்தது மன வருத்தத்துக்குரியது.

இது அரசாங்கத்தினுடைய கருத்தோ, இன்றைக்கு பிரதம விருந்தினராக இருக்கின்ற அமைச்சருடைய கருத்தோ அல்ல.

நான் கலந்து கொள்கின்ற நிகழ்ச்சிகளில், வட மாகாணத்தில் நான் தலைமைத்துவம் வகிக்கின்ற நிகழ்ச்சிகளில் எல்லாம் தேசியகீதம் தமிழில் தான் பாடப்படுவதுண்டு. சிலவேளை வேறு அமைச்சர்கள் வருகின்ற போது என்னுடைய கையை மீறி போய் இருக்கலாம்.

அடுத்து தமிழர்களின் பண்பாடு என்று சொல்லப்படுகின்ற ஆரத்தி எடுப்பது இன்று அது எடுத்தது போன்று தெரியவில்லை. அதுவும் என்னுடைய கவனத்திற்கு வந்த செய்தியையும் கூறிக்கொண்டு, இங்கு நடக்கின்ற எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தேசிய கீதம் தமிழில் பாடப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய வலுவான கருத்தாக இருந்தது.

சமிபத்தில் ஜனாதிபதி மட்டக்களப்பிலும் இது தொடர்பான கருத்தை சொல்லி இருக்கின்றார்.

தேசிய விழாவில் கூட ஆரம்பத்தில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டு நிகழ்ச்சி முடிகின்ற நேரத்தில் தமிழில் பாடுவதற்கான ஏற்பாடு செய்திருக்கின்றார்.

மேலும், சில வேளைகளில் சில அதிகாரிகள் அவ்வாறான தவறுகளை விடுகின்றார்கள். ஆனபடியால் இங்கே முக்கியமான அதிகாரிகள் எல்லாம் இருக்கின்றார்கள். அவர்கள் வரும் சந்தர்ப்பங்களில் அவற்றை கருத்தில் எடுத்துக் கொள்வார்கள் என்று நம்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலத்தை இந்திய பிரதமர் திறந்துவைப்பு
செய்திகள்

உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலத்தை இந்திய பிரதமர் திறந்துவைப்பு

June 6, 2025
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து; மூவர் வைத்தியசாலையில்
செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து; மூவர் வைத்தியசாலையில்

June 6, 2025
மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை
செய்திகள்

மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை

June 6, 2025
சிங்கப்பூருக்கு சென்ற சிறிலங்கன் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கம்
செய்திகள்

சிங்கப்பூருக்கு சென்ற சிறிலங்கன் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கம்

June 6, 2025
துறைமுகத்தில் இலஞ்சம் கேட்ட அதிகாரசபை ஊழியர்கள் இடைநீக்கம்
செய்திகள்

துறைமுகத்தில் இலஞ்சம் கேட்ட அதிகாரசபை ஊழியர்கள் இடைநீக்கம்

June 6, 2025
தென் மேற்கு பருவமழை வலுவடையும் என எதிர்பார்ப்பு
செய்திகள்

தென் மேற்கு பருவமழை வலுவடையும் என எதிர்பார்ப்பு

June 6, 2025
Next Post
மின் கட்டண அதிகரிப்புக்கு அங்கீகாரம் வழங்க முடியும்; இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

மின் கட்டண அதிகரிப்புக்கு அங்கீகாரம் வழங்க முடியும்; இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.