Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழர் பிரதேசத்தில் தமிழில் பாடப்படாத தேசிய கீதம்; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவலை!

தமிழர் பிரதேசத்தில் தமிழில் பாடப்படாத தேசிய கீதம்; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவலை!

3 years ago
in செய்திகள்

தேசிய கீதம் தமிழில் பாடப்பாடாதது மன வருத்தத்துக்குரியது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவலை வெளியிட்டுள்ளார்.

தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் (NVQ) கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று யாழ்.சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

நான் அடிக்கடி “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்று சொல்வது போல கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவை பொருத்த வரையிலோ, அல்லது ஜனாதிபதியை பொருத்தவரையிலோ அல்லது அரசாங்கத்தின் கொள்கையை பொறுத்த வகையிலோ பாராபட்சமற்ற, இனவாதமற்ற கொள்கையில் ஒரு செயற்பாட்டை தான் அது முன்னெடுத்து வருகின்றது.

அரசாங்கத்தில் அமைச்சர் ஒரு சில பேர் இனவாதிகளாக இருக்கலாம், அல்லது இனவாத கருத்துக்களை சொல்பவர்களாக இருக்கலாம், அல்லது அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பவர்களாகவும் இருக்கலாம்.

ஆனால் அது அமைச்சரவையின் கொள்கையோ, அரசாங்கத்தின் கொள்கையோ, வேலைத்திட்டமோ அல்ல, இன்றைய இந்த நிகழ்வு தொடர்பாகவும் என்னுடைய கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகின்றேன்.

தமிழரின் பண்பாடு அல்லது தமிழர்களின் பாரம்பரியம் என்று சொல்லி இங்கு சில நிகழ்ச்சிகளை முன்னெடுத்து இருந்தார்கள்.

அதில் தேசிய கீதம் தமிழில் தான் பாடப்பட்டிருக்க வேண்டும். அது ஒரு துரதிஷ்டவசமாக அதிகாரிகள் அவ்வாறு செய்தது மன வருத்தத்துக்குரியது.

இது அரசாங்கத்தினுடைய கருத்தோ, இன்றைக்கு பிரதம விருந்தினராக இருக்கின்ற அமைச்சருடைய கருத்தோ அல்ல.

நான் கலந்து கொள்கின்ற நிகழ்ச்சிகளில், வட மாகாணத்தில் நான் தலைமைத்துவம் வகிக்கின்ற நிகழ்ச்சிகளில் எல்லாம் தேசியகீதம் தமிழில் தான் பாடப்படுவதுண்டு. சிலவேளை வேறு அமைச்சர்கள் வருகின்ற போது என்னுடைய கையை மீறி போய் இருக்கலாம்.

அடுத்து தமிழர்களின் பண்பாடு என்று சொல்லப்படுகின்ற ஆரத்தி எடுப்பது இன்று அது எடுத்தது போன்று தெரியவில்லை. அதுவும் என்னுடைய கவனத்திற்கு வந்த செய்தியையும் கூறிக்கொண்டு, இங்கு நடக்கின்ற எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தேசிய கீதம் தமிழில் பாடப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய வலுவான கருத்தாக இருந்தது.

சமிபத்தில் ஜனாதிபதி மட்டக்களப்பிலும் இது தொடர்பான கருத்தை சொல்லி இருக்கின்றார்.

தேசிய விழாவில் கூட ஆரம்பத்தில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டு நிகழ்ச்சி முடிகின்ற நேரத்தில் தமிழில் பாடுவதற்கான ஏற்பாடு செய்திருக்கின்றார்.

மேலும், சில வேளைகளில் சில அதிகாரிகள் அவ்வாறான தவறுகளை விடுகின்றார்கள். ஆனபடியால் இங்கே முக்கியமான அதிகாரிகள் எல்லாம் இருக்கின்றார்கள். அவர்கள் வரும் சந்தர்ப்பங்களில் அவற்றை கருத்தில் எடுத்துக் கொள்வார்கள் என்று நம்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

நளிந்த ஜயதிஸ்ஸவின் வாழைக்குலை மதில் பாய்ந்த கதையில் கோட்டா?
அரசியல்

நளிந்த ஜயதிஸ்ஸவின் வாழைக்குலை மதில் பாய்ந்த கதையில் கோட்டா?

June 16, 2026
செல்வம் அடைக்கலநாதன் ரெலோவின் தலைமையாகயிருக்க தகுதியில்லாதவர்; மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா
அரசியல்

செல்வம் அடைக்கலநாதன் ரெலோவின் தலைமையாகயிருக்க தகுதியில்லாதவர்; மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா

June 16, 2026
வடக்கு மற்றும் கிழக்கில் மீட்கப்பட்ட தங்கப் பொருட்கள் தொடர்பான எடையிடல் பணிகள் நிறைவு
செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கில் மீட்கப்பட்ட தங்கப் பொருட்கள் தொடர்பான எடையிடல் பணிகள் நிறைவு

June 16, 2026
மட்டு கல்லடியில் ஆலயத்தில் இரு குழுக்களுக்கிடையே மோதல்; தடுக்கச்சென்ற முதியவரின் வீட்டை சேதப்படுத்திய நபர்கள்
செய்திகள்

மட்டு கல்லடியில் ஆலயத்தில் இரு குழுக்களுக்கிடையே மோதல்; தடுக்கச்சென்ற முதியவரின் வீட்டை சேதப்படுத்திய நபர்கள்

June 16, 2026
இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன
செய்திகள்

இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன

June 16, 2026
வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்
செய்திகள்

வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்

June 16, 2026
Next Post
மின் கட்டண அதிகரிப்புக்கு அங்கீகாரம் வழங்க முடியும்; இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

மின் கட்டண அதிகரிப்புக்கு அங்கீகாரம் வழங்க முடியும்; இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.