Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காசா- இஸ்ரேல் தாக்குதல் குறித்து சுருக்கமான விளக்கம்; அமெரிக்கா வழங்கிய  வாக்குறுதியால் ரஷ்யாவும் உள்நுழையுமா?

காசா- இஸ்ரேல் தாக்குதல் குறித்து சுருக்கமான விளக்கம்; அமெரிக்கா வழங்கிய வாக்குறுதியால் ரஷ்யாவும் உள்நுழையுமா?

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக நடத்தி வரும் தாக்குதில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க வெளியுறவு செயலர் ஆண்டனி ப்ளிங்கன் இஸ்ரேலுக்கு துணை நிற்பதாக கூறியுள்ளார்.

ஜெர்மானிய படைகளிடமிருந்து உயிரை காப்பாற்றிக்கொண்டு மத்திய தரைக்கடல் வழியாக பாலஸ்தீனம் வந்தவர்கள்தான் இந்த யூதர்கள். வாழ்வதற்கு வழிதேடி வந்தவர்களை வரவேற்ற பாலஸ்தீன மக்கள், யூதர்களுக்கு தேவையான அனைத்தையும் கொடுத்தனர். இப்படி இருக்கையில் இரண்டாம் உலகபோரில் யூதர்களின் ஆதரவு வேண்டும் என்பதற்காக பிரிட்டன் இஸ்ரேல் எனும் நாட்டை உருவாக்க முன் வந்தது. இஸ்ரேல் உருவாக்கம் யூதர்களின் நீண்ட ஆண்டுகால எதிர்பார்ப்பு. இதை நிறைவேற்ற பிரிட்டன் ஆதரவளித்த நிலையில் பிரிட்டனுக்கு ஆதரவாக போரில் யூதர்கள் இறங்கினார்கள்.

இப்படி உருவான இஸ்ரேல் கொஞ்சம் கொஞ்சமாக முழு பாலஸ்தீனத்தையும் ஆக்கிரமித்து ஜீரணித்துவிட்டது. சுமார் 25 மைல் நீளமும், 6 மைல் அகலமும் கொண்ட காசா எனும் துண்டு நிலத்தில் 23 லட்சம் பாலஸ்தீனர்கள் வாழ்ந்து வருகிறார்கள். காசா திறந்தவெளி சிறைச்சாலையாக இருக்கிறது. இதற்கு எதிராக குரல் கொடுத்த மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் அம்மக்கள் வேறு வழியின்றி ஆயுத போராட்டத்தை கையில் எடுத்தனர். அப்படிதான் ஹமாஸ் அமைப்பு உருவானது. இந்த அமைப்பு கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது.

மத்திய கிழக்கின் இரும்புக்கோட்டை என்று சொல்லிக்கொண்டிருந்த இஸ்ரேல் மீது இப்படியான தாக்குதல், அவுதும் காசா எனும் சிறிய பகுதியிலிருந்து தொடுக்கப்பட்டது உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. ஏனெனில் இப்படி ஏதாவது ஒரு சம்பவம் நிச்சயம் நடக்கும் என இஸ்ரேல் ஏற்கெனவே கணித்துதான் ‘அயர்ன் ட்ரோம்’ எனும் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி வைத்திருந்தது. இது ஏவுகணை தாக்குதலிலிருந்து இஸ்ரேலை பாதுகாக்கும். ஆனால் ஹமாஸ் அமைப்பினர் ஒரே தடவையாக சுமார் 5000 ஏவுகணைகளை வீசியதால் இந்த ‘அயர்ன் ட்ரோம்’ அமைப்பு ஓவர் லோட் ஆகி பல்வேறு ஏவுகணைகளை தவறவிட்டுவிட்டது.

அவ்வளவுதான் இஸ்ரேல் இதற்கு பதில் தாக்குதல் தொடுக்க தன்னிடமிருந்த மொத்த ராணுவ பலத்தையும் திரட்டி வெறும் 25 மைல் நீளமும், 6 மைல் அகலமும் கொண்ட காசா எனும் துண்டு நிலத்தின் மீது 6வது நாளாக கொடூர தாக்குதலை தொடுத்து வருகிறது. இந்த தாக்குதாலால் ஏறத்தாழ 2,000 பாலஸ்தீனர்கள் வரை உயிரிழந்துள்ளனர். 4,000 பாலஸ்தீனர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலை அரபு நாடுகள் கண்டித்துள்ள நிலையில், தனது அணு ஆயுத போர் கப்பலான ‘யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டை’ அமெரிக்கா காசாவுக்கு அருகே நிலை நிறுத்தியுள்ளது. இங்கிலாந்து தனது ‘R08 குயின் எலிசபெத்’ (R08 Queen Elizabeth) என்ற 60 விமானங்களை தாங்கக் கூடிய போர் கப்பலை காசாவை நோக்கி அனுப்ப யோசித்து வருகிறது. மற்றொருபுறம் அரபு நாடுகள் ஓரணியில் திரள முயன்றுள்ளன.

சூழல் இப்படி இருக்கையில் இன்று இஸ்ரேல் வந்த அமெரிக்காவின் வெளியுறவு செயலர் ஆண்டனி பிளிங்கன், அந்நாட்டின் அதிபர் நெதன்யாகுவுடன் போர் குறித்து கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “உங்களைத் தற்காத்துக் கொள்ள தேவையான பலத்தை நீங்களே கொண்டிருக்கலாம். ஆனால், அமெரிக்கா இருக்கும்வரை நீங்கள் தனியாக இருக்க வேண்டியது இல்லை. நாங்கள் எப்போதும் உங்கள் பக்கம் இருப்போம்” என்று கூறியுள்ளார். அதேபோல “நீங்கள் ஹமாஸ் படையுடன் சண்டையிடுங்கள். ஆனால் அதேநேரம் புதிய போர் முனையை திறப்பதன் மூலம் சிக்கலை உருவாக்கி கொள்ளாதீர்கள். ஒருவேளை இந்த விவகாரத்தில் ஹில்புல்லா நுழைந்தால், நாங்கள் உதவிக்கு வர தயார்” என அமெரிக்க அதிகாரிகள், இஸ்ரேல் ராணுவத்திடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் படைகள் உள்ளே நுழைந்தால் நிச்சயம் ரஷ்யா தனது படைகளை ஈரானுக்கு அனுப்பி ஈரானிலிருந்து பாலஸ்தீனத்திற்கு உதவ சண்டை செய்யும். ரஷ்யாவுக்கு சீனாவும் ஆதரவளிக்கும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு
செய்திகள்

காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

June 8, 2025
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 500,000 இலட்சத்திற்கும் அதிக பெறுமதிகொண்ட பஞ்சவர்ணக் கிளி திருட்டு
செய்திகள்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 500,000 இலட்சத்திற்கும் அதிக பெறுமதிகொண்ட பஞ்சவர்ணக் கிளி திருட்டு

June 8, 2025
மட்டு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு
காணொளிகள்

மட்டு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு

June 8, 2025
செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரை 19 எலும்புக்கூடுகள் அடையாளம்
செய்திகள்

செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரை 19 எலும்புக்கூடுகள் அடையாளம்

June 8, 2025
உப்பை அதிக விலைக்கு விற்றால் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படும்; கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
செய்திகள்

உப்பை அதிக விலைக்கு விற்றால் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படும்; கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்

June 8, 2025
50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை அதிகரிப்பு
செய்திகள்

50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை அதிகரிப்பு

June 8, 2025
Next Post
விக்னேஸ்வரனுக்கு மறதி வியாதி; வைத்தியரை நாட சொல்கிறார் சுமந்திரன்!

விக்னேஸ்வரனுக்கு மறதி வியாதி; வைத்தியரை நாட சொல்கிறார் சுமந்திரன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.