Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
” இந்தியாவிற்கு எதிராக கிழக்கு மாகாண தமிழ் மக்கள் குரல் எழுப்பும் நிலை உருவாகும்” – பண்ணையாளர்கள் தொடர்பில் சாணக்கியன்!

” இந்தியாவிற்கு எதிராக கிழக்கு மாகாண தமிழ் மக்கள் குரல் எழுப்பும் நிலை உருவாகும்” – பண்ணையாளர்கள் தொடர்பில் சாணக்கியன்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

நேற்று (12.10.2023) மட்டு ஊடக அமையத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்களின் ஊடக சந்திப்பு நடைபெற்றது. அதில் மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் பிரச்சனைகள் பற்றியும் குறித்த பிரச்சனைக்கு தீர்வு காண அவர் மேற்கொண்ட முயற்சிகள், நடவடிக்கைகள் பற்றியும் கருத்து தெரிவித்திருந்தார். அவ்வேளையில் ”எதிர்காலத்தில் இந்தியாவுக்கு எதிராக தமிழ் மக்கள் குரல் எழுப்பும் நிலைமையை உருவாக்குவது எமது அரசினுடைய நோக்கமாக இருக்கலாம்” எனவும் தெரிவித்திருந்தார்.

இது குறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதியின் கடந்த மட்டக்களப்பு விஜயத்தில் செங்கலடி மத்தியக்கல்லூரியில் உரையாற்றும் போது இந்தியாவிலிருந்து எதிர்காலத்தில் அமுல் ஐஸ் கிறீம்,அமுல் பால் கம்பெனிகளுக்கு பயன்படும் அதிகம் பால் சுரக்கக்கூடிய மாடுகளை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு கொண்டுவந்து எமது மேய்ச்சற்தரை இல்லாமல் பாரிய அளவு பால் உற்பத்தியில் ஈடுபடப்போகிறோம் என்கிறார். இங்கு இருக்கும் 600000 கால்நடைகளுக்கே மேய்வதற்கு மேய்ச்சல் தரை இல்லாமல் பண்ணையாளர்கள் அவதியுறும் வேளையில் இங்கு அமுலை கொண்டு அமுல்படுத்தப்பர்ப்பார்ப்பது வேடிக்கையான விடயம். இந்திய முதலீடுகள் இங்கு வந்தால் பரம்பரை பரம்பரையாக கால்நடையை சீவனோபாயமாக கொண்டவர்களின் கதி என்ன? கிழக்கு மாகாணத்திலே கால்நடை பண்ணையாளர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக தொடர்ந்து போராட்டங்களை செய்து வரும் நிலையில், அதனுடன் தொடர்புபட்ட உற்பத்தி நடவடிக்கைக்காக இந்தியாவின் முதலீட்டிற்கு இலங்கை அரசாங்கம் சந்தர்ப்பத்தினை வழங்குமாக இருந்தால் இந்தியா இலாபமீட்ட முடியாத நிலையே ஏற்படும். காரணம் இங்குள்ள பண்ணையாளர்களின் வாழ்வாதார நிலை பாதிப்பு, தொழில் சந்தர்ப்பம் இழப்பு இது போன்ற காரணங்களால் இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்புவார்கள். காலப்போக்கில் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்களும் இந்தியாவுக்கு எதிராக குரல் எழுப்பும் நிலைமை கூட ஏற்படும் என்றார்.

குறித்த விடயம் தொடர்பாக ஊடக அமையத்தில் இடப்பெற்ற ஊடக சந்திப்பின் முழு காணொளி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

சிவப்புக் கோட்டை தாண்டிய ஈரான்; மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என இஸ்ரேல் எச்சரிக்கை
உலக செய்திகள்

சிவப்புக் கோட்டை தாண்டிய ஈரான்; மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என இஸ்ரேல் எச்சரிக்கை

June 14, 2025
கடந்த ஆண்டு கிழக்கு மாகாணத்தில் 304 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்; தடுக்க ‘சரோஜா’ திட்டம் ஆரம்பம்
காணொளிகள்

கடந்த ஆண்டு கிழக்கு மாகாணத்தில் 304 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்; தடுக்க ‘சரோஜா’ திட்டம் ஆரம்பம்

June 14, 2025
4 மில்லியனுக்கு மேல் அஸ்வெசும பணத்தை மோசடி செய்த பிரதேச செயலக அதிகாரி கைது
செய்திகள்

4 மில்லியனுக்கு மேல் அஸ்வெசும பணத்தை மோசடி செய்த பிரதேச செயலக அதிகாரி கைது

June 14, 2025
குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்; டொக்டர் தீபால்
செய்திகள்

குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்; டொக்டர் தீபால்

June 14, 2025
அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதைக்கு பூட்டு
செய்திகள்

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதைக்கு பூட்டு

June 14, 2025
வென்னப்புவை பகுதியில் கை கால்களை கட்டி நபரொருவர் படுகொலை
செய்திகள்

வென்னப்புவை பகுதியில் கை கால்களை கட்டி நபரொருவர் படுகொலை

June 14, 2025
Next Post
வீதி அருகில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்!

வீதி அருகில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.