Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குற்றம் செய்யும் எம்.பிக்களை தண்டிக்கும் அதிகார சபை; பதவியிலிருந்து நீக்கவும் இடமுண்டு என்கிறார் விஜேதாஸ!

குற்றம் செய்யும் எம்.பிக்களை தண்டிக்கும் அதிகார சபை; பதவியிலிருந்து நீக்கவும் இடமுண்டு என்கிறார் விஜேதாஸ!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாரதூரமான குற்றச்செயல்களின்போது குற்றவாளிகளாகக் காணப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களை அந்த பதவியிலிருந்து நீக்கும் அதிகாரங்களைக் கொண்டதாக உத்தேச சுயாதீன பாராளுமன்ற தர நிர்ணய அதிகார சபை அமையுமென நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற அதிகாரங்களில் அரைவாசியைக் கொண்டதாக (semi judicial power) ஸ்தாபிக்கப்படவுள்ள இந்த அதிகார சபை, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியொருவரின் தலைமையில் நியமிக்கப்படவுள்ளதாகவும் அதற்காக எந்தவொரு அரசியல்வாதியும் நியமிக்கப்படமாட்டாரென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மக்கள் நம்பிக்கையை ஏற்படுத்தல், பொறுப்பு மற்றும் தொழில் கௌரவத்தை உறுதிப்படுத்துதலுக்கான ஒழுக்கநெறி கோவையொன்று உருவாக்கப்படவேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை முன்வைத்திருந்தார்.

மேற்படி அதிகாரசபையை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலம் தொடர்பில் சபாநாயகர் மற்றும் கட்சித் தலைவர்களது கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன மற்றும் அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஸ ஆகியோர் இணைந்து சமர்ப்பித்திருந்த யோசனைக்கு கடந்த 24 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது ஊழல், மோசடிகள் மற்றும் திருட்டுக்கள் தொடர்பில் குற்றவாளிகளாகக் காணப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு சட்டமொன்று கிடையாதென்றும் அவ்வாறான தருணங்களில் இரண்டு வார காலம் அல்லது மூன்று வார காலம் பாராளுமன்ற அமர்வு தடை மட்டுமே விதிக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.இந்த அதிகார சபையை ஸ்தாபிப்பதற்காக அரசியல் கட்சிகளின் தலைவர்களது கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், இந்த புதிய சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதித் தேவை தொடர்பில் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் அறிக்கையொன்று தயாரிக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளார்.அந்த சந்தர்ப்பத்தில் ஏதாவது அதில் பொருத்தமின்மை காணப்படின் அதன்போது சம்பந்தப்பட்டபாராளுமன்ற உறுப்பினரின் தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சட்ட மாஅதிபர்திணைக்களத்தின் சட்ட மூலப் பிரிவின் மூலம் புதிய அதிகார சபையை உருவாக்குவதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. புதிய அதிகார சபையை ஸ்தாபிப்பது தொடர்பில் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அந்த அதிகார சபையின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் வசதிகளை தீர்மானிப்பது மற்றும் மீளாய்வுசெய்வது அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்கநெறிக் கோவையை நடைமுறைப்படுத்துவது மற்றும் கண்காணிப்பது ஆகிய நடவடிக்கைகள் இடம்பெறும். அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்க நெறி கோவையை நடைமுறைப்படுத்தல் மற்றும் கண்காணித்தல் பாராளுமன்ற அனுமதியின் கீழ் ஒழுக்க தர்மம் மற்றும் சிறப்புரிமை தொடர்பான பாராளுமன்ற தெரிவுக் குழு மூலம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் பின்னர் பாராளுமன்றஉறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்கான பொறுப்பும் அந்த அதிகார சபைக்கு வழங்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

விளக்கமறியலில் இருந்தே நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ; அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டு
செய்திகள்

விளக்கமறியலில் இருந்தே நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ; அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டு

September 8, 2026
மட்டக்களப்பு முன்னாள், இந்நாள் எம்.பிக்கள் மீது ஊழல் விசாரணை தீவிரம்
அரசியல்

மட்டக்களப்பு முன்னாள், இந்நாள் எம்.பிக்கள் மீது ஊழல் விசாரணை தீவிரம்

September 8, 2026
அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் விளக்கமறியல் நீடிப்பு
செய்திகள்

அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் விளக்கமறியல் நீடிப்பு

September 8, 2026
முல்லைத்தீவில் வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன்கள் பறிமுதல்; பெண் கைது!
செய்திகள்

முல்லைத்தீவில் வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன்கள் பறிமுதல்; பெண் கைது!

September 8, 2026
ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’, ‘ஹஷீஷ்’ போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர் கைது!
செய்திகள்

ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’, ‘ஹஷீஷ்’ போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர் கைது!

September 8, 2026
ஈரான் மோதல் முடிந்தால் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறையும்; ட்ரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மோதல் முடிந்தால் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறையும்; ட்ரம்ப்

September 8, 2026
Next Post
மட்டக்களப்பில் 8 வயது குழந்தையை தாக்கிய மௌலவி கைது!

மட்டக்களப்பில் 8 வயது குழந்தையை தாக்கிய மௌலவி கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.