Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தாடி வைத்திருந்த காரணத்தால் பரீட்சைக்கு அனுமதி மறுக்கப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழக மாணவன்; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வடக்கு – கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வியலை சிதைக்கும் செயற்பாடுகளை கண்டித்து கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்கள்.

சீனத்தூதுவர் வடக்கிற்கு வருகை தரவுள்ள நிலையில் இவ்வாறு மாணவர்கள் கண்டன அறிக்கையினை வெளியிட்டுள்ளார்கள்.

குறித்த அறிக்கையில்,

வடக்கு – கிழக்கு கடற்பரப்பில் சீன நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் கடற்றொழிலை அரசாங்கம் பலவந்தமாக அத்துமீறி மேற்கொண்டு வருவதனால் தாம் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளதாகவும், தமது வாழ்வாதாரத்தை சீர்செய்வதற்கு பதிலாக பொருளாதார ரீதியில் சாத்தியமில்லாத நிலையில் பாரம்பரிய வாழ்வாதார பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும் வடமாகாண கடற்றொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வடமாகாண ஆழ்கடல் கடற்றொழிலாளர்கள் இந்தப் பண்ணைகளால் மீன் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் என்றும், கடல் அட்டை ஏற்றுமதிக்கு மட்டுமே என்றும், அது தங்களுடைய முதன்மையான கடற்றொழிலுக்கு இல்லை என்றும் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர்கள் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளனார்.

கொழும்பில் அல்லது மூன்றாம் நாட்டில் வசிக்கும் வைத்தியர்கள், சட்டத்தரணிகள் மற்றும் பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சொந்தமான பண்ணைகள் தாங்கள் வெறும் தொழிலாளர்கள் என்றும் கடற்றொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதேபோன்ற நடவடிக்கை நாட்டிலுள்ள வேறு எங்கும் மேற்கொள்ளப்படாத நிலையில், வட மாகாணத்தில் மட்டும் கடல் அட்டைப் பண்ணைகள் ஊக்குவிக்கப்படுவது ஏன் என்றும் கடற்றொழிலாளர் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வடமாகாண கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடி நடவடிக்கை ஏற்கனவே நலிவடைந்து வரும் நிலையில், அண்மைக்காலமாக சீனாவில் இருந்து மீன்களை இறக்குமதி செய்யும் கடற்றொழில் அமைச்சின் நடவடிக்கை கடற்றொழில் சமூகத்தினரிடையே மேலும் அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடற்றொழிலாளர்களின் நலனைப் பணயம் வைத்து சீன நலன்களை ஊக்குவிக்கும் இத்தகைய முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதாக கடற்றொழிலாளர் சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர், ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர், கடற்றொழிலாளர் சங்கத்தினர் ஆகியோர் சீனாவில் இருந்து மீன்களை இறக்குமதி செய்யும் அரசாங்கத்தின் அண்மைய நடவடிக்கைக்கு தமது வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு ஆதரவாக நின்று எமது வளங்களை பிற நோக்கங்களுக்காக ஆக்கிரமிக்கும் சீன அரசாங்கத்தின் எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும்.

இலங்கை கடற்பரப்பில் வெளிநாட்டுக் கப்பல்கள் குறிப்பாக சீனர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கும் அரசாங்கத்தின் முயற்சியாகக் கருதப்படும் உத்தேச மீன்பிடி சட்டமூலத்தையும் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டிக்கிறனர்.

இலங்கை கடற்பரப்பில் வெளிநாட்டுக் கப்பல்கள் குறிப்பாக சீனர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கும் அரசாங்கத்தின் முயற்சியாகக் கருதப்படும் உத்தேச மீன்பிடி சட்டமூலத்தையும் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டிக்கிறனர்.

தொடர்புடையசெய்திகள்

அரசு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றியுள்ளது; சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு!
செய்திகள்

அரசு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றியுள்ளது; சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு!

June 17, 2026
அமெரிக்க தம்பதியருக்கு பிறந்த ஆசியக் குழந்தை; பெற்றோர் எடுத்துள்ள முக்கிய முடிவு
உலக செய்திகள்

அமெரிக்க தம்பதியருக்கு பிறந்த ஆசியக் குழந்தை; பெற்றோர் எடுத்துள்ள முக்கிய முடிவு

June 17, 2026
கோட்டாபயவின் ரிட் மனு விசாரணையில் இருந்து நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ விலகல்
செய்திகள்

கோட்டாபயவின் ரிட் மனு விசாரணையில் இருந்து நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ விலகல்

June 17, 2026
யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை
செய்திகள்

யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை

June 17, 2026
ஆஷு மாரசிங்க எமது கட்சி உறுப்பினர் அல்ல என அறிவித்தது ஐக்கிய தேசியக் கட்சி
செய்திகள்

ஆஷு மாரசிங்க எமது கட்சி உறுப்பினர் அல்ல என அறிவித்தது ஐக்கிய தேசியக் கட்சி

June 17, 2026
யாழில் இரு தீவுகளை இணைத்து மேம்பாலம் கட்ட ஒருங்கிணைப்பு குழு அனுமதி
செய்திகள்

யாழில் இரு தீவுகளை இணைத்து மேம்பாலம் கட்ட ஒருங்கிணைப்பு குழு அனுமதி

June 17, 2026
Next Post
வாழைச்சேனையில் பொலிஸ் ஜீப் விபத்து!

வாழைச்சேனையில் பொலிஸ் ஜீப் விபத்து!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.