Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை நேர்மையாக முன்னெடுத்து கொண்டிருக்கும் ஒரே ஒரு கட்சி இலங்கை தமிழரசு கட்சி மாத்திரமே; இரா.சாணக்கியன்!

சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை நேர்மையாக முன்னெடுத்து கொண்டிருக்கும் ஒரே ஒரு கட்சி இலங்கை தமிழரசு கட்சி மாத்திரமே; இரா.சாணக்கியன்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை நேர்மையாக முன்னெடுத்து கொண்டிருக்கும் ஒரே ஒரு கட்சி இலங்கை தமிழரசு கட்சி மாத்திரமே என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா.துரைரெட்னத்தினால் கிழக்கில் நடைபெற்ற படுகொலைகள் தொகுக்கப்பட்டு ‘கிழக்கின் சிவந்த சுவடுகள்’; என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள நூலின் வெளியீட்டு நிகழ்வு நேற்று 05 மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

இந்த நூலைப் பொறுத்த வரையில் சமகால அரசியலில் நாங்கள் இலங்கை தமிழரசு கட்சி ஆகிய நாங்கள் தற்பொழுது எங்களுடைய சில அரசியல் ரீதியாக அடைவதற்காக முயற்சி எடுக்கும் விடயங்களை அதற்கு கடந்த காலங்களிலேயே நடந்த சில விடயங்களை வைத்து சில கருத்துக்களை முன்வைக்கலாம் என்று நினைக்கின்றேன்.

உண்மையிலே இலங்கை தமிழரசு கட்சியை பொறுத்தவரையில் எங்களுடைய அரசியல் தீர்வு மற்ற விடயம் எங்களுடைய பொறுப்பு கூறல் இந்த இரண்டு விடயங்களில் பிரதானமான விடயங்களாக முன்னெடுத்துக் கொண்டு செல்கின்றோம் அப்போது கடந்த காலங்களில் அதாவது நான் பிறப்பதற்கு முன்னர் நடந்த சில விடயங்கள் இந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றது.

அதிலும் குறிப்பாக நான் நினைக்கின்றேன் இலங்கையில் மிக முக்கியமாக நான்கு இயக்கங்கள் தமிழ் மக்கள் சார்ந்து நான்கு இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவை அனைத்தினுடைய கோரிக்கைகளும் தனி நாடு என்பதாகவே இருந்தது.

நான் நினைக்கின்றேன் 1987ம் ஆண்டு காலப்பகுதிக்கு பிற்பாடு அமைதிப்படை வந்ததன் பிற்பாடு எங்களுடைய நான்கு இயக்கங்களில் ஒரு இயக்கத்தை தவிர ஏனைய இயக்கங்கள் அனைத்தும் தங்களுடைய கொள்கைகளை மாற்றி இருந்தது.

ஒரே ஒரு இயக்கம் தான் தனி நாடு என்பதற்கான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வந்தார்கள். தற்பொழுது சமகால அரசியலைப் பொறுத்த வரையிலே எங்களுடைய கட்சிகளை பொறுத்த அளவில் எத்தனையோ பிரதானமான கட்சிகள் இருந்தாலும் சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை நேர்மையாக முன்னெடுத்து கொண்டிருக்கும் ஒரே ஒரு கட்சி இலங்கை தமிழரசு கட்சி மாத்திரமே.

இந்த புத்தகம் எழுதுவது அண்ணன் துரைரத்தினமாக இருந்தாலும் இதில் இருக்கும் விடயங்களை நான் கூறினால் சாணக்கியன் தான் இந்த விடயங்களை கூறுகின்றார் என்று வரும். 2004 ஆம் ஆண்டு தேர்தல் நடந்த காலப்பகுதி அந்த தேர்தல் நடந்த தேர்தல் விடயங்களை பற்றி இந்த நூலிலே ஐயா மிக தெளிவாக எழுதி இருக்கின்றார்.

2004 ஆம் ஆண்டு தேர்தலில் எட்டு வேட்பாளர்களில் ஜோசப்பரராஜ சிங்கம் ஐயா மாத்திரம் தான் வன்னி விடுதலை புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக கருணா நடத்திய கூட்டத்திலே பேசியதாக அவருடைய இந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றது. ஏனைய வேட்பாளர்கள் மதில் மேல் பூனையாக இருந்தார்கள் என எழுதி இருக்கின்றார்.

ஆனால் மதில் மேல் பூனையாக இருந்ததற்கு பின்னர் நான் நினைக்கின்றேன் அந்த நேரத்திலே கருணா அவர்களுக்கு ஆதரவாக பேசியவர்களுக்கு என்னென்ன விடயங்கள் நடந்தது அது எவ்வாறு நடந்தது அதனை அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள் இதிலே பல குற்றச்சாட்டுகள் கிங்ஸ்லி இராசநாயகத்தினைடைய கொலை தொடர்பான பல குற்றச்சாட்டுகள் பொதுவாக பல இடங்களிலேயே பலருக்கு எதிராக விரல் நீட்டப்படுகின்றது அவ்வாறான விடயங்களுக்கு மிகத் தெளிவான பதிலை இந்த புத்தகத்திலே வழங்கி இருக்கின்றார். என தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!
செய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!

July 31, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!
செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!

July 31, 2026
சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!
செய்திகள்

சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

July 31, 2026
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம்; ஹேமசிறிக்கும் மரணதண்டனை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம்; ஹேமசிறிக்கும் மரணதண்டனை!

July 31, 2026
நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!

July 31, 2026
கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு
செய்திகள்

கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு

July 31, 2026
Next Post
அடுத்த இரண்டு போட்டிகளிலும் கண்டிப்பாக வெற்றியீட்டுவோம்; குசல் மெண்டிஸ் உறுதி!

அடுத்த இரண்டு போட்டிகளிலும் கண்டிப்பாக வெற்றியீட்டுவோம்; குசல் மெண்டிஸ் உறுதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.