Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மகாவலி திட்டத்தினால் தமிழருக்கு மேலும் ஒரு பெருத்த அடி; 10 இலட்சம் காணிகளில் சிங்கள குடியேற்றங்கள்!

மகாவலி திட்டத்தினால் தமிழருக்கு மேலும் ஒரு பெருத்த அடி; 10 இலட்சம் காணிகளில் சிங்கள குடியேற்றங்கள்!

3 years ago
in முக்கிய செய்திகள்

மகாவலி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுமார் 10 இலட்சம் காணி துண்டுகளில் எந்த தமிழருக்கும்
ஒரு துண்டு காணியேனும் வழங்கப்படவில்லை என்று யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள்
துணைவேந்தர் வாழ்நாள் பேராசிரியர் பொன். பால சுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் காணப்படுகின்ற தொல்லியல் திணைக்களம், வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பனமிக வேகமாக செயல்படுகின்றன. தமிழ் மக்களின்
பூர்வீக விவசாய நிலங்கள், வழிபாட்டு இடங்களை தொல்லியல் வன ஒதுக்குப்பகுதி என காணிகளை கையகப்படுத்தி, அந்தத் தமிழர்களை காணி அற்றவர்களாக்குவதே இந்தத் திணைக்களங்களின்ன் திட்டமாகும்.

யுத்த காலப்பகுதியில் தமிழர்களுடைய புராதன அடையாளங்கள் மற்றும் வரலாற்று நிலங்கள் பாதுகாக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழர்களிடமிருந்து நிலப் பகுதியை குறைக்க வேண்டும் என்பதில் தென்னிலங்கை திட்டத்தை அரங்கேற்றி வருகிறது. மகாவலி அதிகார சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் பிரகாரம், பிரதேச செயலகமோ மாவட்ட செயலகமோ கேள்வி கேட்க முடியாத அளவுக்கு அதிகாரம் உள்ள சபையாக காணப்படுகிறது.

மகாவலி எல் வலயத்தில் உள்ளடங்கும் முல்லைத்தீவு மாவட்டம், வெலி ஓயா பகுதியளவில் அல்லது முழுதாக
சிங்கள மக்களையே குடியேற்ற திட்டம் வழங்கப்பட்டுள்ளது.யாழ். மாவட்டத்தில் 14 ஆயிரம் பேர்காணியற்றவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு இன்னும் காணிகள் வழங்கப்பட
வில்லை. இந்து சமயம் பல்வேறு வழிகளிலும் நசுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

இந்து சமயத்தில் இருக்கின்ற பல் வேறு அமைப்புகளும் ஒன்றிணைந்து வலுவான ஓர் அமைப்பின் கீழ்
செயற்படும்போது தமிழ் மக்களின் நிலங்களையும் இந்து சமயத்தையும் பாதுகாக்க முடியும் என்று அண்மையில் நல்லை ஆதினத்தில் நடந்த கூட்டத்தில் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்
செய்திகள்

சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

June 6, 2026
நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!
செய்திகள்

நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!

June 6, 2026
டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!
செய்திகள்

டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!

June 6, 2026
ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!
செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!

June 6, 2026
Next Post
கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து தூக்கி எறியப்பட்ட தமிழ் மொழி!

கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து தூக்கி எறியப்பட்ட தமிழ் மொழி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.