Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் ஆட்கடத்தல் செயற்பாடுகள்; முறியடிக்க அமெரிக்கா முன்வைத்துள்ள பரிந்துரைகள்!

இலங்கையில் ஆட்கடத்தல் செயற்பாடுகள்; முறியடிக்க அமெரிக்கா முன்வைத்துள்ள பரிந்துரைகள்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஆட்கடத்தல் செயற்பாடுகளை முறியடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்கா சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் இலங்கையின் ஆட்கடத்தல் நிலைவரம் குறித்து அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

“ஆட்கடத்தலை முற்றாக முடிவுக்குக் கொண்டு வருவதற்குரிய குறைந்தபட்ச தராதரங்கள் இலங்கை அரசாங்கத்தினால் இன்னமும் முழுமையாக எட்டப்படவில்லை. இருப்பினும் அதனை எட்டுவதற்கான குறிப்பிடத்தக்களவிலான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது.

ஆட்கடத்தலில் ஈடுபடுவோரைக் கைதுசெய்தல் மற்றும் தண்டனை வழங்கல், ஆட்கடத்தல் தொடர்பான விசாரணைகளில் சர்வதேச கட்டமைப்புக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கல் போன்றன இம்முயற்சிகளில் அடங்குகின்றன.

அதுமாத்திரமன்றி ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்ட பெருமளவானோர் அரசாங்கத்தினால் அடையாளம் காணப்பட்டதுடன், அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பெண்கள் ஆட்கடத்தலுக்கு இலக்காகக்கூடிய வாய்ப்பை அளித்த சில நெருக்கடியான குடியகல்வு கொள்கைகள் மறுசீரமைக்கப்பட்டன.

ஆட்கடத்தலுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முகவர் நிலையங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, அவற்றின் அனுமதிப்பத்திரங்கள் இரத்துச்செய்யப்பட்டதுடன் அவை கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டன. எது எவ்வாறெனினும் சில முக்கிய விடயப்பரப்புக்களில் இலங்கை அரசாங்கம் குறைந்தபட்ச தராதரங்களைப் பூர்த்திசெய்யவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் ஆட்கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிரான விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தல், ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டோரைக் கண்டறிவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தல், பாதிக்கப்பட்டோருக்கு அவசியமான உதவிகள் மற்றும் சேவைகளின் கிடைப்பனவை உறுதிசெய்தல், வெளிநாட்டுப்பயண முகவரகங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்க முன்னர் உரியவாறு கண்காணித்தல், குடியகல்வு வழிகாட்டல்கள் பால் அடிப்படையில் வேறுபடாதிருப்பதை உறுதிப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்.

மேலும், வீட்டுப்பணியாளர்களுக்குரிய வழிகாட்டல்களை சீராக வகுப்பதுடன், அவர்களது பணியிடத்தைக் கண்காணித்தல், தொழிலாளர் சார்ந்த ஆட்கடத்தலைக் கண்டறிவதற்கான வள ஒதுக்கீடுகளை அதிகரித்தல், ஆட்கடத்தல் தொடர்பில் பொலிஸார், நீதிபதிகள், குடிவரவு – குடியகல்வுப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட சகல தரப்பினருக்கும் விழிப்புணர்வூட்டல் ஆகிய நடவடிக்கைகளும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட வேண்டும்.” என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
Next Post
கட்சி மாறிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது பீதியில்; விவசாய அமைச்சர் விளக்கம்!

தேன் தொடர்பான பொருட்களுக்கு புதிய சட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.