Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்பில் பிரதமர் விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

புலம்பெயர்ந்த மக்களுடன் இணைந்து பயணிக்க தயார்; பிரதமர் தெரிவிப்பு!

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சர்வதேச நாடுகளில் வாழ்கின்ற இலங்கை புலம்பெயர் மக்களுடன் இணைந்து செயற்படுவதற்கும் அவர்களது பங்களிப்பை இலங்கையின் வளர்ச்சிக்கு பெற்றுக்கொள்வதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன்
செயற்பட்டு வருகின்றது என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

கடந்த வாரம் முழுவதும் இலங்கைக்கு விஜயம் மேற் கொண்டு உலகத் தமிழர் பேரவை மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு
வார்த்தை நடத்தியிருந்தனர்.

இந்தநிலையிலேயே பிரதமர் தினேஷ் குணவர்தன புலம் பெயர் மக்களுடன் இணைந்து செயற்படுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்- உலகத் தமிழர் பேரவை மற் றும் சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் மகாநாயக்கத் தேரர்கள், ஜனாதிபதி, எதிர்க் கட்சித் தலைவர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சபா நாயகர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியிருந்ததுடன் இலங்கையை மீள் கட்டியெழுப்புவதை நோக்கமாக கொண்ட இமயமலை பிரகடனம் ஒன்றையும் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் நான் இந்தத்தரப்பினரை சந்திக்கவில்லை. எனினும் ஒரு விடயத்தை குறிப்பிட விரும்புகிறேன். அரசாங்கம் புலம்பெயர் மக்களின் பங்களிப்பை பெறுவதற்கு தயாராக இருப்பதுடன் அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

புலம் பெயர் மக்களின் பிரதிநிதிகளை இதற்கு முன்னரும் பல தடவைகள் சந்தித்திருக்கிறேன். அவர்கள் இலங்கையில் வந்து முதலீடு செய்யவும் அபிவிருத்தியில் பங்கெடுக்கவும் ஆர்வத்துடன் இருக்கின்றனர். அவர்களுக்கான சகல வசதிகளையும் செய்து கொடுக்க அரசாங்கம் தயாராக இருக்கின்றது.

அதற்காகவே வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்காக ஒரு அலுவலகமும் நியமிக்கப்பட்டிருக்கின்றது. புலம்பெயர் மக்கள் இலங்கை வந்து முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்தால் அதற்கான சகல வசதிகளையும் செய்து கொடுக்க அரசாங்கம் தயாராக இருக்கின்றது-என்றார்.

தொடர்புடையசெய்திகள்

அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு
அரசியல்

அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

May 15, 2025
காத்தான்குடி நகரசபை தவிசாளர், பிரதி தவிசாளர் நியமனம்
செய்திகள்

காத்தான்குடி நகரசபை தவிசாளர், பிரதி தவிசாளர் நியமனம்

May 15, 2025
யாழில் ஆசிரியர் தாக்கியதில் 5 பாடசாலை மாணவர்கள் காயம்
செய்திகள்

யாழில் ஆசிரியர் தாக்கியதில் 5 பாடசாலை மாணவர்கள் காயம்

May 15, 2025
ஓட்டமாவடி வீடொன்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு
செய்திகள்

ஓட்டமாவடி வீடொன்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

May 15, 2025
இந்த ஆண்டு நடந்த வீதி விபத்துகளில் மாத்திரம் 957 பேர் உயிரிழப்பு
செய்திகள்

இந்த ஆண்டு நடந்த வீதி விபத்துகளில் மாத்திரம் 957 பேர் உயிரிழப்பு

May 15, 2025
ஹட்டன் பிரதான வீதியில் எரிபொருள் வாகனம் விபத்து- கசிந்த எரிபொருளை பிடிக்க முண்டியடித்த மக்கள்
செய்திகள்

ஹட்டன் பிரதான வீதியில் எரிபொருள் வாகனம் விபத்து- கசிந்த எரிபொருளை பிடிக்க முண்டியடித்த மக்கள்

May 15, 2025
Next Post
கோவிட் வைரஸின் புதிய திரிபு; உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

கோவிட் வைரஸின் புதிய திரிபு; உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.