Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 353 குடும்பங்கள் நலன்புரி நிலையங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்; மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்!

மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 353 குடும்பங்கள் நலன்புரி நிலையங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்; மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 9 நலன்புரி நிலையங்களில் 353 குடும்பங்களைச் சேர்ந்த 954 பேர் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற
விசேட ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் இங்கு அவர் கருத்து தெரிவிக்கையில், 10846 குடும்பங்களைச் சேர்ந்த 37845 மக்கள் தங்களின் வீடுகளில் உள்ள சொத்துக்கள் மற்றும் கால் நடைகளை பாதுகாத்துக் கொள்வதற்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் அவர்களுக்கு வேண்டிய நலன்புரி திட்டங்கள் பிரதேச செயலகத்தின் மூலம் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் பிரதேச செயலாளர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு 3 நாட்களுக்கு தேவையான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அதனை விட உலருணவு பொருட்கள் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடனும், அரச உதவியுடன் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனை விட கொழும்பு அனர்த்த நிலையத்தின் மூலம் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு படுக்கை விரிப்பு உள்ளிட்ட நிவாரனங்கள் வழங்கப்பட்டு வருகின்றதாகவும் தெரிவித்தார்.

அடைமழை காரணமாக மாவட்டத்தில் கிரான் பிரதேசத்தில் புலி பாய்ந்தகல், வாகரை, கல்லறிப்பு, சித்தாண்டி, பெருமாவெளி, நாசிவன்தீவு போன்ற இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு தற்காலிக போக்குவரத்து படகுச் சேவைகள் மற்றும் இயந்திர சேவைகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு எவ்வித தடங்களும் ஏற்படவில்லை முறைப்பாடுகளும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை எனவும் நாசிவன்தீவில் மாத்திரம் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக கடற்படையின் உதவியுடன் படகு சேவை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்

தொடர்புடையசெய்திகள்

யாழில் ஆசிரியர் தண்டித்ததால் கிருமி நாசினியை அருந்திய பாடசாலை மாணவன்
செய்திகள்

யாழில் ஆசிரியர் தண்டித்ததால் கிருமி நாசினியை அருந்திய பாடசாலை மாணவன்

June 8, 2025
ஆண்களுக்கு 50 யுவான் வழங்கி கட்டிப்பிடி வைத்தியத்தினூடாக மன அழுத்தத்தை போக்கும் சீன பெண்கள்
உலக செய்திகள்

ஆண்களுக்கு 50 யுவான் வழங்கி கட்டிப்பிடி வைத்தியத்தினூடாக மன அழுத்தத்தை போக்கும் சீன பெண்கள்

June 8, 2025
ஜனாதிபதி செய்தாரா? மக்கள் யாரை நம்புவது? அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்!; நிசாம் காரியப்பர்
செய்திகள்

ஜனாதிபதி செய்தாரா? மக்கள் யாரை நம்புவது? அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்!; நிசாம் காரியப்பர்

June 8, 2025
சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

June 7, 2025
வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்
செய்திகள்

வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்

June 7, 2025
தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி
அரசியல்

தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி

June 7, 2025
Next Post
வெள்ள நீர் கடந்து செல்லும் ஆபத்தான இடங்களில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பொலிசாருக்கு மாவட்ட அரசாங்க அதிபர் பணிப்புரை!

வெள்ள நீர் கடந்து செல்லும் ஆபத்தான இடங்களில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பொலிசாருக்கு மாவட்ட அரசாங்க அதிபர் பணிப்புரை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.