Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிஸ் வண்டிக்கும் தீ, புடவைக்கடைக்கும் தீ; முன்னாள் இராணு வீரர் திருக்கோவிலில் கைது!

பொலிஸ் வண்டிக்கும் தீ, புடவைக்கடைக்கும் தீ; முன்னாள் இராணு வீரர் திருக்கோவிலில் கைது!

3 years ago
in செய்திகள்

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் ஜீப்வண்டி மற்றும் புடவைக்கடை ஒன்றுக்கு தீ வைத்து எரித்த குற்றச்சாட்டில் முன்னாள் இராணு வீரர் மற்றும் அவரது நண்பனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (24.04.2023) முன்னெடுக்கப்பட்டதாகத் திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த ஜீப் வண்டியொன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தம்பிலுவில் பிரதான வீதியில் அமைந்துள்ள புடவை கடை கட்டிடத் தொகுதி ஒன்று கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி அதிகாலை தீப்பற்றி எரிந்து முற்று முழுதாக சாம்பலாகியுள்ளது.

இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதன்போது பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் நேற்றைய தினம் (24.04.2023) திருக்கோவில் 3ஆம் பிரிவைச் சேர்ந்த 21 வயதுடைய இராணுவத்தில் கடமையாற்றி, தலைமறைவாகி வந்த இராணுவ இராணு வீரரையும் திருக்கோவில் முதலாம் பிரிவைச் சோந்த அவரது 20 வயதுடைய நண்பரையும் அவர்களது வீடுகளில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இராணுவ வீரர், புடவைக்கிடையில் கடமையாற்றி வந்த நிலையில், அங்கிருந்து புடவைகளைத் திருடிச் சென்ற சம்பவங்கள் காரணமாக அவருக்கான சம்பளத்தை வழங்காது அவரை கடை முதலாளி வேலையில் இருந்து நிறுத்தியுள்ளார்.

இதன் காரணமாக முதலாளியிடம் சம்பளம் கேட்டு முரண்பட்ட முன்னாள் இராணு வீரர், குறித்த கடை தொகுதிக்கு மார்ச் மாதம் 23ஆம் திகதி அவரது 20 வயதுடைய நண்பனுடன் சேர்ந்து பெட்ரோலினை ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

அவ்வாறே கடந்த காலத்தில் ஒரு சம்பவத்தில் தன் மீது பொலிஸார், பொய் குற்றம் சுமத்தி கைது செய்தமைக்கு பழிவாங்குவதற்காக, பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த ஜீப் வண்டிக்கு தீ வைத்து விட்டுத் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
ரிதியகம சபாரி பூங்காவில் இறைச்சிக்காக வெட்டப்படும் மிருகங்கள்; புத்திக பத்திரன கேள்வி!

ரிதியகம சபாரி பூங்காவில் இறைச்சிக்காக வெட்டப்படும் மிருகங்கள்; புத்திக பத்திரன கேள்வி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.