Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் இலங்கை!

ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் இலங்கை!

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாராகும் வகையில் 58 விளையாட்டு வீரர்களைக் கொண்ட அணியை, உயர் செயல்திறன் குழுவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பரிந்துரைத்துள்ளார்.

பாரிஸ் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஜூலை மாதம் 26 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

அத்துடன், ஒகஸ்ட் டமாதம்28 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி வரை பாரிஸில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஒலிம்பிக் போட்டிக்கு 11 வெவ்வேறு விளையாட்டுத் துறைகளில் மொத்தம் 33 வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

இதன்படி, இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 வீர வீராங்கனைகள் 8 வெவ்வேறு விளையாட்டுத் துறைகளில் பங்கேற்கத் தயாராகி வருவதாக விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் பணிப்பாளர் நாயகம் ஷேமல் பெர்னாண்டோ அண்மையில் தெரிவித்திருந்தார்.

அத்துடன், 33 தடகள வீரர்களில் 19 பேர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் தடகளப் போட்டிகளில் கௌரவத்திற்காக போட்டியிடவுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாராகும் விளையாட்டு வீரர்களை, உயர் செயல்திறன் குழுவிற்கு ஹரின் பெர்னாண்டோ பரிந்துரைத்துள்ளார்.

இந்த நடவடிக்கை ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதான மாதாந்த கொடுப்பனவைத் தவிர, இலங்கையின் உயர் செயல்திறன் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க தேவையான அனைத்து வசதிகளையும் நிதியையும் பெற வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பரா ஒலிம்பிக் வரலாற்றில், இலங்கை ஒரு தங்கப் பதக்கம் மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்கள் உட்பட நான்கு பதக்கங்களை வென்றுள்ளது.

தினேஷ் பிரியந்த கடந்த 2020 ஆம் ஆண்டில் தங்கப் பதக்கத்தையும், 2016 இல் வெண்கலப் பதக்கத்தையும், பிரதீப் சஞ்சய 2012 இல் வெண்கலப் பதக்கத்தையும், துலான் கொடிதுவாக்கு 2020 இல் வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பம்
செய்திகள்

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பம்

June 4, 2025
போதை மாத்திரைகளுடன் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கைது
செய்திகள்

போதை மாத்திரைகளுடன் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கைது

June 4, 2025
முத்தையன்கட்டில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல்
செய்திகள்

முத்தையன்கட்டில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல்

June 4, 2025
“ஆனையிறவு உப்பு” என்ற பெயரில் உள்ளுர் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை
செய்திகள்

“ஆனையிறவு உப்பு” என்ற பெயரில் உள்ளுர் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை

June 3, 2025
கனடாவில் புகலிடம் பெறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை
செய்திகள்

கனடாவில் புகலிடம் பெறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை

June 3, 2025
தேர்தல் பிரசார வருமானம் மற்றும் செலவிங்கள் குறித்து முறைப்பாடளிக்க எந்தவொரு நபருக்கும் வாய்ப்பு
செய்திகள்

தேர்தல் பிரசார வருமானம் மற்றும் செலவிங்கள் குறித்து முறைப்பாடளிக்க எந்தவொரு நபருக்கும் வாய்ப்பு

June 3, 2025
Next Post
போதைப்பொருளுடன் இளம் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட ஏழு பேர் கைது!

போதைப்பொருளுடன் இளம் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட ஏழு பேர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.