Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இன்று 160 வது பொலிஸ் வீரர்கள் தினம்!

இன்று 160 வது பொலிஸ் வீரர்கள் தினம்!

2 years ago
in செய்திகள்

நாட்டு மக்களின் உயிர் மற்றும் சொத்துக்களை பாதுகாப்பதற்காக வீரத்துடனும், விவேகத்துடனும் செயற்பட்டு 160 வருட பொலிஸ் வரலாற்றில் தங்கள் உயிர்களை நீத்த பொலிஸ் வீரர்களின் ஞாபகார்த்த தினம் இன்றாகும்.

‘தர்மமாக செயற்படுபவன் தர்மத்தினால் காப்பாற்றப்படுவான்’ எனும் தொனிப்பொருளில் கீழ் இயங்கும் பொலிஸ் சேவையானது நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக அர்பணித்து அன்றும் இன்றும் தன் உயிரை தியாகம் செய்த வீரர்களின் ஞாபகார்த்த தினமான வியாழக்கிழமை (21) நாட்டின் சகல பொலிஸ் பிரிவுகளிலும் காலை 8 மணிக்கு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1864 ஆம் ஆண்டு மாவனெல்ல, உதுவன்கந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறையின் போது சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 21 ஆம் திகதி பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

பொதுமக்களின் ஜனநாயக உரிமை, பாதுகாப்பு ,வன்முறை தடுப்பு, போக்குவரத்து கட்டுப்பாடு, சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக பல சந்தர்ப்பங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது உயிர்களை அர்பணித்துள்ளனர் என்பதுடன் தமது குடும்ப உறுப்பினர்களின் உயிர்களையும் அர்பணித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பொலிஸ் வீரர்கள் தினத்தை முன்னிட்டு கடமையின் போது உயிர்நீத்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்பங்களை கௌரவிக்கும் விசேட நிகழ்வு பம்பலப்பிட்டி பொலிஸ் படை தலைமையகத்தில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புடையசெய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

August 4, 2026
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்
செய்திகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

August 4, 2026
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது
செய்திகள்

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

August 4, 2026
ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு

August 4, 2026
தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி
செய்திகள்

தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி

August 4, 2026
மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!
செய்திகள்

மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!

August 4, 2026
Next Post
மயிலத்தமடு தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு; இருவருக்கு பிடியானை!

மயிலத்தமடு தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு; இருவருக்கு பிடியானை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.