Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு

மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இலங்கையின் வரலாற்றில் அப்பாவிகள் மீதும் ஆலயங்களில் வழிபடுகின்றவர்கள் மீதும் நடாத்தப்படுகின்ற எந்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்கும் எந்த கொலைகளுக்கும் இதுவரையில் நீதிகிடைக்கவில்லையென பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்ட மக்கள் எழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர் அருட்தந்தை கந்தையா ஜெகதாஸ் தெரிவித்தார்.

சீயோன் தேவாலயம் உட்பட இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்று நேற்று (21) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவுத்தூபியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

சியோன் தேவாலயத்தில் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அருட்தந்தை க.ஜேசுதாசன் அடிகளார் மற்றும் அருட்பணி பி.அருள்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன் போது உயிரிழந்தவர்களுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டதுடன், தாக்குதலில் காயமடைந்து இன்னும் சிகிச்சைபெற்றுவருபவர்களும் அந்த தாக்குதலின் தாக்கத்திலிருந்து இன்னும் மீளமுடியாத நிலையில் உள்ளவர்களும் விரைவில் இயல்புநிலைக்கு திரும்ப பிரார்த்தனை செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து அருட்தந்தையர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவுகளினால் கண்ணீருடன் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள்,பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு
செய்திகள்

கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு

June 7, 2026
பொதுமக்கள் தினத்தில் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது; பிரதேச செயலாளர்கள் சங்கம்
செய்திகள்

பொதுமக்கள் தினத்தில் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது; பிரதேச செயலாளர்கள் சங்கம்

June 7, 2026
2029ஆம் ஆண்டு நாமல் ஜனாதிபதியாக வருவார்; அர்ச்சுனா எம்பி ஆருடம்
செய்திகள்

2029ஆம் ஆண்டு நாமல் ஜனாதிபதியாக வருவார்; அர்ச்சுனா எம்பி ஆருடம்

June 7, 2026
சித்திரவதையால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் சுரேஷ் சலே; கம்மன்பில கவலை
செய்திகள்

சித்திரவதையால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் சுரேஷ் சலே; கம்மன்பில கவலை

June 7, 2026
மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
Next Post
இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டி

இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.