Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆசனவாயில் காற்று நிரப்பி விளையாட்டு- குடல் வெடித்து உயிரிழந்த நபர்; இந்தியா- இலங்கையில் ஒரேமாதிரியான சம்பவம் பதிவு!

ஆசனவாயில் காற்று நிரப்பி விளையாட்டு- குடல் வெடித்து உயிரிழந்த நபர்; இந்தியா- இலங்கையில் ஒரேமாதிரியான சம்பவம் பதிவு!

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

இந்தியா பெங்களூருவில் பைக் சர்வீஸ் சென்டரில் “ஏர் பிரஷர் பைப்” மூலம் ஆசனவாயில் காற்று பிடித்த சம்பவத்தில், இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கர்நாடக மாநில விஜயபுரா மாவட்டத்தை சேர்ந்தவர் யோகேஷ் (28 வயது ) என்னும் நபர் பெங்களூருவில் தங்கி டெலிவரி ஏஜென்ட் ஆக பணிபுரிந்து வருகிறார்.

யோகேஷ் தன்னுடைய இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்வதற்காக பெங்களூரு சம்பிகேஹள்ளி பகுதியில் உள்ள தனியார் பைக் சர்வீஸ் சென்டரில் பைக்கை சர்வீஸ்க்கு விட்டுள்ளார். அந்த சர்வீஸ் சென்டரில் யோகேஷ் நண்பன் முரளி என்ற இளைஞர் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்தநிலையில், நண்பர்கள் இருவரும் குறும்புத் தனம் செய்வதில், ஈடுபட்டுள்ளனர். அப்போது சர்வீஸ் சென்டரில் இருந்த “ஏர் பிரஷர் பைப்பை” எடுத்து இருவரும் விளையாடத் தொடங்கியுள்ளனர்.

இதில் முரளி அந்த “ஏர் பைப்பை” வைத்து முதலில் யோகேஷ் முகம் மற்றும் வயிற்றுப் பகுதியில் காற்று விட்டு விளையாடி , ஒருகட்டத்தில் ஆசனவாயில் “ஏர் பிரசர் பைப்” மூலமாகக் காற்று பிடித்துள்ளார்.

இதில் ஆசன வாய் மூலமாகக் காற்று உள்ளே சென்று, யோகேஷ் வயிறு பெரிதாக மாறி, குடல் வெடித்து நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த யோகேஷை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே யோகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், முரளியைக் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளையாட்டாகச் செய்த சம்பவம், விபரீதமாக மாறி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம் இதே போலான சம்பவம் ஒன்றும் தென்னிலங்கை பகுதியில் பதிவாகியுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

தென்னிலங்கை தனியார் நிறுவனமொன்றின் பழுதுபார்ப்பு பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் ஆசனவாயில் விளையாட்டாக காற்று நிரப்பும் இயந்திரக் குழாயை செருகி காற்று நிரப்பியதால், அவர் குடல் வெடித்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் நிறுவனத்தில் பணியாற்றிய பாணந்துறை அலுபோமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தேஷான் மதுஷங்க என்ற 24 வயதுடைய இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (25ஆம் திகதி) பிற்பகல், அதே நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள், உயிரிழந்த ஊழியரின் ஆசனவாயில் விளையாட்டாக காற்று நிரப்பும் இயந்திரத்தின் குழாயை பிடித்துள்ளனர்.

இதன்போது, குழாய் செருகுப்பட்டு, உடனடியாக அகற்ற முடியாமல் போனது. அத்துடன், அதிக அழுத்தத்தில் காற்று உட்செலுத்தப்பட்டதால் குடல் வெடித்து ஊழியர் உயிரிழந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த ஊழியரின் பிரேத பரிசோதனை நேற்று (29ம் திகதி) ராகம வைத்தியசாலையில் நடைபெறவிருந்தது. இந்நிலையில் சம்பவம் தொடர்புடைய இரு தொழிலாளர்களை சப்புகஸ்கந்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய தொழிலாளர்கள் இருவரும் திஸ்ஸமஹாராமய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

June 7, 2025
வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்
செய்திகள்

வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்

June 7, 2025
தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி
அரசியல்

தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி

June 7, 2025
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி
செய்திகள்

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

June 7, 2025
ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்
செய்திகள்

ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்

June 7, 2025
மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்
செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்

June 7, 2025
Next Post
திருகோணமலையில் பெண் போதைப்பொருள் வியாபாரி கைது!

திருகோணமலையில் பெண் போதைப்பொருள் வியாபாரி கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.