Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அதிக மது அருந்தும் போட்டி; பங்கேற்றவர் தூக்கத்திலேயே உயிரிழப்பு!

அதிக மது அருந்தும் போட்டி; பங்கேற்றவர் தூக்கத்திலேயே உயிரிழப்பு!

2 years ago
in செய்திகள்

அதிக மது அருந்தியவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட போட்டியின் போது அதிக மது அருந்திய மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.

ஹட்டன் காவல்துறை பிரிவிற்குட்பட்ட லெடண்டி தோட்டத்தின் மார்ல்ப்ரோ பிரிவில் வசிக்கும் கணேசன் ராமச்சந்திரன் என்ற 39 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவராவார்.

கடந்த 27ம் திகதி எஸ்டேட்டில் உள்ள இந்து கோவிலில் வருடாந்த தேர் திருவிழா இடம்பெற்றதுடன், இதில் கலந்து கொண்ட இளைஞர்கள் குழுவினர் அதிகளவு மது அருந்துபவர்களை தெரிவு செய்யும் போட்டியை நடத்தினர்.

ஒரே தோட்டத்தில் வசிக்கும் மூன்று பேர் கலந்து கொண்ட இப்போட்டியில், மூன்று 750 மில்லி மது போத்தல்கள் வழங்கப்பட்டு, குறைந்த நேரத்தில் குடிப்பவரை வெற்றியாளராக தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்னரும் தாங்கள் அதிகமாக மது அருந்தியிருந்ததாக அந்த தோட்டத்தின் தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இரவு வீட்டுக்கு சென்று உணவு சாப்பிட்டுவிட்டு உறங்கியவர், அதிகாலை (28) தூக்கத்திலேயே உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இந்த போட்டியில் கலந்துகொண்ட மற்றுமொருவர் மிகவும் சுகவீனமடைந்த நிலையில் திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனையின் போது, ​​நிமோனியா காய்ச்சல் மற்றும் கழுத்து நரம்பில் உணவு அடைப்பு ஏற்பட்டமையே மரணத்திற்கு காரணம் என திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த நபரின் உடலின் பல பாகங்கள் அரசாங்க மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இறந்தவரின் இறுதிச் சடங்குகள் இன்று (31) குறித்த தோட்டத்தில் நடைபெற்றது.

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் வீட்டு பணியாளர்களுக்கான வெற்றிடம் அதிகரிப்பு; வெளிநாடு செல்வதே காரணமாமென தகவல்
செய்திகள்

இலங்கையில் வீட்டு பணியாளர்களுக்கான வெற்றிடம் அதிகரிப்பு; வெளிநாடு செல்வதே காரணமாமென தகவல்

June 21, 2026
தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்
செய்திகள்

தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்

June 21, 2026
கல்முனை கல்வி வலயம் 9ஏ சித்திகளில் கிழக்குமாகாணத்தில் முதலிடம்
செய்திகள்

கல்முனை கல்வி வலயம் 9ஏ சித்திகளில் கிழக்குமாகாணத்தில் முதலிடம்

June 21, 2026
மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்
செய்திகள்

மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்

June 21, 2026
கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்
செய்திகள்

கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்

June 21, 2026
தாயின் கண்முன்னே பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் 1 வயது மகன் உயிரிழப்பு
உலக செய்திகள்

தாயின் கண்முன்னே பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் 1 வயது மகன் உயிரிழப்பு

June 21, 2026
Next Post
இருவரை மோதித்தள்ளிய தனியார் பேருந்து; மட்டு மாவடிவேம்பு பகுதியில் சம்பவம்!

இருவரை மோதித்தள்ளிய தனியார் பேருந்து; மட்டு மாவடிவேம்பு பகுதியில் சம்பவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.