Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ். பல்கலை மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு ஆரம்பம்!

யாழ். பல்கலை மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு ஆரம்பம்!

3 years ago
in முக்கிய செய்திகள்

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையை நினைவு கூரும் முகமாக வடக்கு, கிழக்கு முழுவதும் முள்ளி வாய்க்கால் கஞ்சி வழங்கப்படவுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை வல்வெட்டித்துறையில் ஆரம்பமாகும் இந்த நிகழ்வு எதிர்வரும் 15ஆம்திகதி வரை வடக்கு, கிழக்கு முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்றுநடத்திய செய்தி யாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக் கப்பட்டது.தமிழர் தாயகம் எங்கும் பயணித்துமுள்ளிவாய்கால் கஞ்சியை எமது உறவுகளுடன் பரிமாறி எமது இனம்இனவழிப்புக்கு உள்ளான வரலாற்றையும் வலிகளையும் எமது இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயல்பாட்டை முன்னெடுக்கவுள்தாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர். அத்துடன், நாம் முன்னெடுக்கும் இச்செயல்பாட்டில் அனைத்து தமிழ் மக்களும் எல்லா வேறுபாடுகளையும் துறந்து தமிழினமாக எம்முடன் இணையுமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம் – என்றனர்.

கஞ்சி விநியோகம் வல்வெட்டித்துறையில் இன்று கால முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நிகழ்வு ஆரம்பமாகும். தொடர்ந்து, மருதனார்மடம் சந்தி, காரைநகர் இந்துக் கல்லூரி முன்பாக, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக, சாவகச்சேரி பேருந்து நிலையம் முன்பாக முள்ளி வாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்படும். நாளை புதன்கிழமை காலை கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக,
புதுக்குடி யிருப்பு, முல்லைத்தீவு, மாங்குளத்தில் விநியோகிக்கப்படும். நாளை மறுதினம் வியாழக்கிழமை மன்னாரிலும் வவுனியாவிலும் கஞ்சிவிநியோ கிக்கப்படவுள்ளது. வெள்ளிக்கிழமை திருகோணமலை சிவன் கோவில், பத்திரகாளி அம்மன் கோவில், அன்பொளிபுரம், மூதூர் பகுதியிலும், மறு நாள் சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பங்கேற்புடன் வந்தாறுமூலை வளாகம் முன்பாகவும் செங்கலடி, ஆரை யம்பதி, மட்டக்களப்பு பிள்ளையார் கோவில் பகுதியிலும் அடுத்தநாள், ஞாயிற்றுக் கிழமை அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் மற்றும் பொத்துவில் கஞ்சி விநியோகிக்கப் படவுள்ளது. எதிர்வரும், 15ஆம் திகதி முதல் யாழ்ப்பாணத்தின் சகல பாடசாலை களிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படும் என்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி;  ஐவர் கைது
செய்திகள்

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி; ஐவர் கைது

September 7, 2026
தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!
செய்திகள்

தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!

September 7, 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!
செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!

September 7, 2026
பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!
செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!

September 7, 2026
ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!
செய்திகள்

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!

September 7, 2026
கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!
செய்திகள்

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!

September 7, 2026
Next Post
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழர்; ட்ரம்ப் பாராட்டு!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழர்; ட்ரம்ப் பாராட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.