Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2ஆம் தர மாணவனை ஆசிரியர் தாக்கிய விவகாரம் ; மேலும் ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கும் ஊர் மக்கள்!

2ஆம் தர மாணவனை ஆசிரியர் தாக்கிய விவகாரம் ; மேலும் ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கும் ஊர் மக்கள்!

1 year ago
in செய்திகள்

ஆசிரியரொருவர் மாணவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புப்படுத்தி ஏனைய மாணவர்களும் பாதிப்பையும் அவமானத்தையும் சந்திக்கும் வகையில் சிலர் முகநூல்களில் செயற்பட்டு வருகின்றமை வேதனை அளிப்பதாக சுந்தரபுரம் கிராம மக்கள் தெரிவித்தனர்.

அண்மையில் சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் இரண்டாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கியமையின் காரணமாக அம் மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் ஆசிரியை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த கிராம மக்கள் ஒன்றிணைந்து இன்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

பாடசாலையில் நடைபெற்ற சம்பவமானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாகவே காணப்படுகிறது. எனினும் நாம் எவருக்கும் பக்கச் சார்பின்றி செயற்படுபவர்கள் என்ற ரீதியில் குறித்த சம்பவத்தில் யார் சரி யார் பிழை என்பதற்கு அப்பால் அங்கு கற்று வரும் ஏனைய மாணவர்களின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சிலர் செயற்படுகின்றனர்.

அவர்கள் எமது கிராமத்தில் வசிக்காதவர்களாக உள்ளனர்.

இந்தப் பாடசாலை வலய மட்டத்தில் இரண்டாம் தரத்தில் உள்ள பாடசாலையாக காணப்படுகிறது. விளையாட்டுத்துறையாக இருந்தாலும் சரி கல்வியிலும் முன்னேற்றம் அடைந்த பாடசாலையாக விளங்கி வருகின்றது.

இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்ட மக்கள் வாழுகின்ற இந்த கிராமத்தில் அமைக்கப்பட்ட பாடசாலை பல இன்னல்களுக்கு மத்தியில் ஒரு முன்னணி பாடசாலையாக மாற்றம் பெற்று இருக்கிறது.

சிலர் இவ்வாறான வெற்றிகளை வெளிப்படுத்துவதை விடுத்து எங்கே தவறு நடக்கிறது என்பதை பார்த்து அதனை சரியாக ஆராயாமல் பாடசாலையையும் கிராமத்தையும் அவமானப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு செயல்படுகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளை கிராம மக்களாகிய நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே முகப்புத்தகங்களிலும் சில இணையதளங்களிலும் தமக்கு வேண்டிய வகையில் எழுதிவிட்டு செல்பவர்கள் அங்கு கற்கும் ஏனைய மாணவர்கள் தொடர்பிலும் அக்கறை கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

சூடுபிடிக்கும் கைதிகளை விடுவித்த விவகாரம்; சிறைச்சாலைகள் ஆணையாளரை பணி இடைநீக்கம் செய்ய தீர்மானம்
செய்திகள்

சூடுபிடிக்கும் கைதிகளை விடுவித்த விவகாரம்; சிறைச்சாலைகள் ஆணையாளரை பணி இடைநீக்கம் செய்ய தீர்மானம்

June 9, 2025
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் விபரங்களை வெளியிட்டார் கம்மன்பில
செய்திகள்

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் விபரங்களை வெளியிட்டார் கம்மன்பில

June 9, 2025
இன்று முதல் அமுலுக்கு வருகிறது ட்ரம்பின் 12 நாடுகளுக்கான தடை
உலக செய்திகள்

இன்று முதல் அமுலுக்கு வருகிறது ட்ரம்பின் 12 நாடுகளுக்கான தடை

June 9, 2025
முகக்கவசத்துக்கு உடனடியாக கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டும்; தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர்
செய்திகள்

முகக்கவசத்துக்கு உடனடியாக கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டும்; தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர்

June 9, 2025
17 சபைகளிலும் ஆட்சி அமைப்போம் குறுக்கே எவரும் வர வேண்டாம்; சுமந்திரன் எச்சரிக்கை
அரசியல்

17 சபைகளிலும் ஆட்சி அமைப்போம் குறுக்கே எவரும் வர வேண்டாம்; சுமந்திரன் எச்சரிக்கை

June 9, 2025
வவுனியாவிலுள்ள வீட்டுக்குள் மறைக்கப்பட்ட நிலையில் 10 கிலோ கஞ்சா மீட்பு; சந்தேக நபர் கைது
செய்திகள்

வவுனியாவிலுள்ள வீட்டுக்குள் மறைக்கப்பட்ட நிலையில் 10 கிலோ கஞ்சா மீட்பு; சந்தேக நபர் கைது

June 9, 2025
Next Post
மைத்திரி ஒரு பைத்தியம்; சந்திரிகா குற்றச்சாட்டு!

மைத்திரி ஒரு பைத்தியம்; சந்திரிகா குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.