Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு நகரில் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் 32வது ஆண்டு நிறைவு நாள் நிகழ்வு !

மட்டு நகரில் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் 32வது ஆண்டு நிறைவு நாள் நிகழ்வு !

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் (EDS) 32வது ஆண்டு நிறைவு நாள் நிகழ்வும் மாணவர் பராமரிப்பு திட்டத்தின் வெள்ளி விழா ஆண்டு நிகழ்வுகள் சங்கத் தலைவர் N. ஜோதிராஜா தலைமையில் சங்கத்தின் சிவநேசராசா மண்டபத்தில் நேற்று காலை மு.ப 9.30 மணிக்கு நடைபெற்றது.

முன்னாள் மாவட்ட கல்விப் பணிப்பாளரும், மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றிய திரு. S.S. மனோகரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றது.

சங்கத்தில் 20 வருடங்களுக்கு மேலாக கற்பித்தல் பணியில் ஈடுபடும் K. குணரெத்தினம், திருமதி R. ரஞ்சிதமலர், S. புனிதசுந்தரம், V. பேரின்பராஜா ஆகியோர் மாணவர்களினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

சிறப்பு அதிதியாக சங்கத்தின் ஸ்தாபக தலைவர் S. தேவசிங்கன் கலந்துகொண்டார். இவர் தமது உரையில் சங்கத்தின் தோற்றம் தொடர்பாகவும் இக்காலக்கட்டத்தில் தாம் எதிர்நோக்கிய சவால்கள் தொடர்பாகவும் எடுத்துரைத்தார். சங்கத்தின் பராமரிப்பில் உள்ள மாணவர்கள் தாம் கற்கும் பாடசாலைகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக தமது வருத்தத்தை தெரிவித்தார்.

மேலும் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் வேண்டுகோளுக்கமைய இப்பிரதேச இரு பெரும் பாடசாலைகள் மாவட்டக் கல்விப் பணிப்பாளரால் பெற்ற அனுகூலங்களையும் சபைக்கு ஞாபகமூட்டினார்.

இறுதியாக பிரதம அதிதியைக் கௌரவிக்கம் நிகழ்வு இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து பிரதம அதிதி தனது உரையில் “EDS பராமரிப்புத் திட்டத்தை சங்கத்தின் ஸ்தாபகர் ஆரம்பிக்கும் போது அவருக்கு சில சிக்கல்கள் இருந்தது இதனால் ஆண் மாணவர்களை அருகிலுள்ள ஆண் பாடசாலை விடுதியிலும் பெண்களை தமது வீட்டிலும் தங்கியிருக்க வழிசெய்தார். இதன் காரணமாக விவேகானந்தா பெண்கள் கல்லூரியில் பெண்கள் விடுதியை ஆரம்பிக்க வழியேற்பட்டது.

இதே நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வள நிலையமொன்றை ஆரமப்பிக்கும் தேவை ஏற்பட்டது. இதை கள்ளியங்காட்டிலுள்ள சாகிரா கல்லூரியில் அமைக்குமாறு எனக்கு பணிக்கப்பட்டது. இருப்பினும் அதைக் கல்லடி உப்போடையிலுள்ள விவேகானந்தா கல்லூரியில் அமைக்க திட்டமிட்டேன். இப்பிரதேசத்தில் சிலர் விவேகானந்தா மகளீர் வித்தியாலயத்தை மூடுவதற்காக நான் திட்டமிடுவதாக என்னைக் குற்றம் சாட்டினர். இன்று இதன் பலாபலன்களை இச்சமூகம் அனுபவிக்கின்றது.

பிள்ளையாரடியிலுள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தை மட்டக்களப்பிற்குக் கொண்டுவர காரணமான இப்பிரதேசத்தைச் சேர்ந்த பேராசிரியர் வரகுணம் என்பதை பலர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதேபோல் மட்டக்களப்பு தேசிய கல்லூரியை இங்கு கொண்டுவர யார் காரணமானவர் என்பது பலருக்குத் தெரியாது. காலங்கள் மாறும்போது வரலாறுகள் திரிபுபடுத்தப்படுகின்றது. எனவே வரலாறுகளை ஆவணப்படுத்த வேண்டும் என்றார்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது
செய்திகள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது

June 8, 2025
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு
செய்திகள்

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு

June 8, 2025
ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை
செய்திகள்

ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை

June 8, 2025
24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்
செய்திகள்

24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்

June 8, 2025
பிரபாகரன் தமது தேசியத் தலைவர் என்று அர்ச்சுனா குறிப்பிடுவதற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு
செய்திகள்

பிரபாகரன் தமது தேசியத் தலைவர் என்று அர்ச்சுனா குறிப்பிடுவதற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு

June 8, 2025
காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு
செய்திகள்

காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

June 8, 2025
Next Post
தனிமையில் வசிப்போரை குறிவைக்கும் கொள்ளையர்கள்; பொலிஸார் எச்சரிக்கை!

தனிமையில் வசிப்போரை குறிவைக்கும் கொள்ளையர்கள்; பொலிஸார் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.