Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விடுதலைப் புலிகள் முன்னாள் போராளிகளுக்கு தென்னிலங்கையில் தூபி?

விடுதலைப் புலிகள் முன்னாள் போராளிகளுக்கு தென்னிலங்கையில் தூபி?

3 years ago
in முக்கிய செய்திகள்

இலங்கையில் இடம்பெற்ற யுத்ததின் போதும், அரசியல் அமைதியின்மைகள் அல்லது குடியியல் குழப்பங்களின் போதும் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் நினைத் தூபி ஒன்றை அமைக்க சிறிலங்கா அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பொதுமக்கள், முப்படையினர், காவல்துறை அலுவலர்கள் மற்றும் முன்னாள் போராளிகளை நினைவு கூரும் வகையில் இந்தத் துாபி அமைக்கப்படவுள்ளது.

இதன் ஊடாக விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளும் நினைவு கூரும் வாய்ப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.

இலங்கை சுதந்திரத்தின் பின்னர் குடியியல் குழப்பங்கள், அரசியல் அமைதியின்மைகள், இன மோதல்கள் மற்றும் நீண்டகால யுத்தம் ஆகியவற்றிற்கு முகங்கொடுத்தமையினால் அனைத்து இன, மத, தொழில் மற்றும் ஏனைய தனித்துவங்களைக் கொண்ட மக்கள் அதனால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன் மோதல்களினால் மகளின் நல்வாழ்க்கையில் பாதிப்புக்கள் ஏற்பட்டதுடன் நாட்டின் முன்னோக்கிய பயணத்திற்கு தடையாக அமைந்திருந்தன.

இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகச் சட்டத்தின் மூலம் நினைவேந்துகை மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் மூலம் கூட்டாக இழப்புக்களை வழங்குவது அழுத்தங்களுக்கு உள்ளாகிய நபர்களின் சமூகங்களுக்கும் குழுக்களுக்கும் ஏதுவான வகையிலான உரிமை என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய இலங்கையில் ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மைகள் அல்லது குடியியல் குழப்பங்களின் விளைவாக உயிர்நீத்த பொதுமக்கள், முப்படையினர், காவல்துறை அலுவலர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் உள்ளிட்ட அனைத்து நபர்களையும் நினைவு கூரும் வகையில் நினைவுத் துாபி அமைக்க சிறிலங்கா அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நல்லிணக்கம் மற்றும் மீளிணைப்பின் அடையாளமாக கொழும்பு நகரில் பொருத்தமான இடமொன்றில் நினைவுத் தூபியை நிர்மாணிப்பதற்காக சிறிலங்கா அதிபர் சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கிழக்கு பல்கலையினால் மூடப்பட்டுள்ள பொது வீதி; திறந்து தருமாறு கோரிக்கை
செய்திகள்

கிழக்கு பல்கலையினால் மூடப்பட்டுள்ள பொது வீதி; திறந்து தருமாறு கோரிக்கை

June 16, 2026
காலி தேசிய வைத்தியசாலையில் மின்மாற்றியில் தீ விபத்து!
செய்திகள்

காலி தேசிய வைத்தியசாலையில் மின்மாற்றியில் தீ விபத்து!

June 16, 2026
தன்னை கைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய நீதிமன்றில் மனு
செய்திகள்

தன்னை கைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய நீதிமன்றில் மனு

June 16, 2026
ஏறாவூரில் நடந்ததாக கூறப்படும் சம்பவம்!; ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்!
காணொளிகள்

ஏறாவூரில் நடந்ததாக கூறப்படும் சம்பவம்!; ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்!

June 16, 2026
வட்டவளையில் முச்சக்கரவண்டி 75 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து; சாரதி காயம்!
செய்திகள்

வட்டவளையில் முச்சக்கரவண்டி 75 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து; சாரதி காயம்!

June 16, 2026
QR குறியீட்டைக் கேட்ட எரிபொருள் நிலைய ஊழியர் மீது தாக்குதல்; இரு இளைஞர்களை தேடும் பொலிஸார்!
செய்திகள்

QR குறியீட்டைக் கேட்ட எரிபொருள் நிலைய ஊழியர் மீது தாக்குதல்; இரு இளைஞர்களை தேடும் பொலிஸார்!

June 16, 2026
Next Post
ATM இயந்திரத்தில் பணத்தை களவாடி மின்சார கட்டணம் செலுத்திய பாதுகாப்பு உத்தியோகத்தர்!

ATM இயந்திரத்தில் பணத்தை களவாடி மின்சார கட்டணம் செலுத்திய பாதுகாப்பு உத்தியோகத்தர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.