Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரி20 உலகக்கிண்ணத்தில் வியாஸ்காந்; வாய்ப்பு கொடுத்தமைக்கான காரணத்தை தெரிவித்துள்ள தேர்வுக்குழு!

ரி20 உலகக்கிண்ணத்தில் வியாஸ்காந்; வாய்ப்பு கொடுத்தமைக்கான காரணத்தை தெரிவித்துள்ள தேர்வுக்குழு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை குழாம் தேர்வு தொடர்பில் அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று (13) இலங்கை கிரிக்கெட் சபையில் நடைபெற்றது.

இந்த ஊடக சந்திப்பின் போது ஜெப்ரி வெண்டர்சே மற்றும் அகில தனன்ஜய ஆகிய அனுபவ சுழல் பந்துவீச்சாளர்கள் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக வியாஸ்காந்த் இணைக்கப்பட்டமைக்கான காரணம் வினவப்பட்ட போது தேர்வுக்குழு உறுப்பினர்களான டில்ருவான் பெரேரா மற்றும் அஜந்த மெண்டிஸ் ஆகியோர் தங்களுடைய பதிலை தெரிவித்தனர்.

“வியாஸ்காந்தை எடுத்துக்கொண்டால் அவர் அணியிலிருக்கும் ஏனைய சுழல் பந்துவீச்சாளர்களை விட உயரமானவர். அவர் பந்துவீசும் பாணியும் மேலும் உயரத்தை கொடுக்கிறது.

எனவே மேற்கிந்திய தீவுகளில் உள்ள ஆடுகளங்களில் வியாஸ்காந்தின் வேகம் சிறந்த சாதகத்தை கொடுக்கும் என நம்புகிறோம்”. என டில்ருவான் பெரேரா குறிப்பிட்டார்.

இதேவேளை அஜந்த மெண்டிஸ், அகில தனஞ்சய மற்றும் ஜெப்ரி வெண்டர்சேயை வைத்து பார்க்கும் போது வியாஸ்காந்த் கடந்த காலங்களில் சிறப்பாக பந்துவீசியுள்ளார்.அதுமாத்திரமின்றி வீரர் ஒருவர் சரியான கட்டத்தில் இருக்கையில் அதிலிருந்து பயனை பெற்றுக்கொள்ள வேண்டும்.

சர்வதேச போட்டிகளில் வியாஸ்காந்த் அதிகமாக விளையாடவில்லை.எனினும் ரி20 லீக் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி வருகின்றார்.

எந்தவொரு சவாலையும் அவரால் எதிர்கொள்ள முடியும் என எதிர்பார்க்கிறோம். எனவேதான் வியாஸ்காந்தை தேர்வுசெய்ய தீர்மானித்தோம்” என்றார்.

அதேசமயம் 2024 ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கோப்பை தொடரானது, அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஜூன் 1 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை
உலக செய்திகள்

தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை

July 30, 2026
தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது
செய்திகள்

தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது

July 30, 2026
சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!
செய்திகள்

சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!

July 30, 2026
வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்
செய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

July 29, 2026
மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்
செய்திகள்

மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்

July 29, 2026
காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு
செய்திகள்

காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு

July 29, 2026
Next Post
சிவப்பு நிற உதட்டுச்சாயத்திற்கு தடை விதித்துள்ள நாடு!

சிவப்பு நிற உதட்டுச்சாயத்திற்கு தடை விதித்துள்ள நாடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.