நேபாளம், குறைந்த எடையுடன் மற்றும் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கும் நோக்கில் தனது முதல் தாய்ப்பால் வங்கியை நிறுவியுள்ளது.
இந்தத் திட்டம், யுனிசெஃப், நேபாள அரசு மற்றும் பல்வேறு கூட்டாளர்கள் இணைந்து செயல்படுத்தும் கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது.
உலகளவில் ஆண்டுதோறும் 15 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் குறைப்பிரசவமாகப் பிறக்கின்றனர். நேபாளம் மற்றும் பிற நடுத்தர வருமான நாடுகளில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 81,000 குறைப்பிரசவங்கள் பதிவாகுகின்றன.
இந்நிலையில், அந்தக் குழந்தைகளின் நலனை மேம்படுத்துவதற்கும், தாய்ப்பால் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் இந்த வங்கி ஒரு மிக முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.









