Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வட மாகாண ஆளுநர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு; கேள்வியெழுப்பியுள்ள பொதுமக்கள்!

வட மாகாண ஆளுநர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு; கேள்வியெழுப்பியுள்ள பொதுமக்கள்!

2 years ago
in செய்திகள்

வடக்கு மாகாண ஆளுநரின் செயற்பாடுகள் குறித்து பொதுமக்கள் குற்றம் சுமத்துவதாக இலங்கையில் உள்ள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அந்த ஊடகம் தெரிவித்துள்ளதாவது,

வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுக்கான வெற்றிடங்கள் நிலவும் நிலையில் தகுதியான அதிகாரிகள் இருந்தும் நியமிக்காத நிலை காணப்படுகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, வட மாகாண அமைச்சுக்களான கல்வி, சுகாதாரம், மகளிர், விவகாரம் மற்றும் ஆளுநரின் செயலாளர் ஆகியன தொடர்ந்தும் பதில் செயலாளர்கள் கடமையில் உள்ளனர்.

இவ்வாறான நிலையில் அண்மையில் நிர்வாக சேவை சிறப்பு தரத்திற்கு பதவி உயர்வு பெற்ற அன்ரன் எழிலரசி ,அருள் நாதன் ஆகியோர் வடக்கு மாகாண சபைக்கு உள்ளீர்க்கப்படட போதிலும் அவர்களுக்குரிய பதவி நிலைகள் வழங்கப்படவில்லை.

அது மட்டுமல்லாது கடந்த ஏழு மாதங்களாக வடக்கு மாகாண சபைக்கு உள்ளீர்க்கப்பட்ட நிர்வாக சேவை சிறப்புத் தர அதிகாரியான ஆழ்வார் பிள்ளை சிறீக்கு அமைச்சு ஒன்றின் செயலாளர் பதவி வழங்காமல் தொடர்ந்தும் மாகாண சபையில் உள்ளார்.

வடக்கு மாகாண சபை அமைச்சுக்களில் சுகாதார அமைச்சு அத்தியாவசிய துறையாக உள்ள நிலையில் மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக உள்ள ஜெகுவுக்கு பதில் கடமை செயலாளராக சுகாதார அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண அமைச்சுக்களில் உள்ள மூன்று செயலாளர்கள் உரிய தரத்தினை பூர்த்தி செய்யாத அதிகாரிகளாக காணப்படும் நிலையிலும் விவசாய அமைச்சின் செயலாளர் ஜெகுவுக்கு மேலதிகமாக சுகாதார அமைச்சையும் வழங்கியமை அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே வடமாகாண அமைச்சுக்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நிலையில் உரிய தரத்தினை பூர்த்தி செய்த அதிகாரிகளை அமைச்சுக்கு நியமிப்பதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்காததன் பின்னணி என்ன என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

கல்முனை ஹிஜாப் விவகாரம் முறைப்பாடாய் தமக்கு கிடைக்கவில்லை என அரசு அறிவிப்பு
செய்திகள்

கல்முனை ஹிஜாப் விவகாரம் முறைப்பாடாய் தமக்கு கிடைக்கவில்லை என அரசு அறிவிப்பு

August 11, 2026
தென்கிழக்குப் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தொலைந்த தங்க நகையை உரிய மாணவியிடம் மீள ஒப்படைத்த மாணவிக்கு பாராட்டு
செய்திகள்

தென்கிழக்குப் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தொலைந்த தங்க நகையை உரிய மாணவியிடம் மீள ஒப்படைத்த மாணவிக்கு பாராட்டு

August 11, 2026
மாமாங்கம் தேர் திருவிழாவில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி அறுப்பு
செய்திகள்

மாமாங்கம் தேர் திருவிழாவில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி அறுப்பு

August 11, 2026
கந்தளாய் குளத்தில் சட்டவிரோத மீன்பிடி; 4,000 மீற்றர் நைலோன் வலைகள் பறிமுதல்
செய்திகள்

கந்தளாய் குளத்தில் சட்டவிரோத மீன்பிடி; 4,000 மீற்றர் நைலோன் வலைகள் பறிமுதல்

August 11, 2026
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!
செய்திகள்

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!

August 11, 2026
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையா?
செய்திகள்

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையா?

August 11, 2026
Next Post
யாழில் பஸ்ஸில் பயணித்த பெண்ணொருவரின் தாலிக்கொடி திருட்டு!

யாழில் பஸ்ஸில் பயணித்த பெண்ணொருவரின் தாலிக்கொடி திருட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.