Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ் மக்கள் அநுரவை நம்ப வேண்டாம்; ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு!

தமிழ் மக்கள் அநுரவை நம்ப வேண்டாம்; ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு!

2 years ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

“வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள், ஜே.வி.பியினரின் பொய் வாக்குறுதிகளை நம்பி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அந்தக் கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாக்களிக்கும் தீர்மானத்தை எடுக்கவே கூடாது” என்று சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

“வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரித்த ஜே.வி.பியினர் தமிழர்களுக்கு எப்படி புதிய அரசமைப்பின் ஊடாக அரசியல் தீர்வை வழங்குவார்கள்? எப்படி 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவார்கள்?” என்றும் ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.

ஜே.வி.பியினர் ஒருபோதும் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தமாட்டார்கள் என்றும், அவர்கள் புதிய அரசமைப்பின் ஊடாக அரசியல் தீர்வை வழங்க முன்வரமாட்டார்கள் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

தேசிய இனப் பிரச்சினைக்குப் புதிய அரசமைப்பு மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அதுவரையில் தற்போதுள்ள மாகாண சபை முறைமையை அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் முழு நடைமுறையாக்கத்தோடு முன்னெடுக்க வேண்டும் என்றும், இதுவே தங்களின் நிலைப்பாடு என்றும் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் அந்த அமைப்பின் பிரதிநிதிகளும் யாழ்ப்பாணத்தில் தம்மைச் சந்தித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் குழுவிடம் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஆயுத வன்முறையாளர்களான ஜே.வி.பியினரை நம்பி வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஏமாறக்கூடாது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவே தமிழர்களுக்குத் தீர்வை வழங்கக்கூடிய ஒரே தலைவர். எனவே, அவருக்கே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்.” – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!
செய்திகள்

லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!

June 19, 2026
கொழும்பில் ஸ்பா என்ற பெயரில் இயங்கிய 09 பாலியல் தொழில் விடுதிகள் முற்றுகை
செய்திகள்

கொழும்பில் ஸ்பா என்ற பெயரில் இயங்கிய 09 பாலியல் தொழில் விடுதிகள் முற்றுகை

June 19, 2026
யாழில் தங்க கடத்தலில் ஈடுபட்ட 8 பேரும் தடுப்பு காவலில்!
செய்திகள்

யாழில் தங்க கடத்தலில் ஈடுபட்ட 8 பேரும் தடுப்பு காவலில்!

June 19, 2026
கற்பிட்டி வெடிகுண்டு அகற்றும் பயிற்சியில் விமானப்படையினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் சிறப்பு விசாரணை ஆரம்பம்
செய்திகள்

கற்பிட்டி வெடிகுண்டு அகற்றும் பயிற்சியில் விமானப்படையினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் சிறப்பு விசாரணை ஆரம்பம்

June 19, 2026
சுவிட்சர்லாந்தில் இடம்பெறவிருந்த அமைதி பேச்சுவார்த்தை திடீரென இரத்து!
செய்திகள்

சுவிட்சர்லாந்தில் இடம்பெறவிருந்த அமைதி பேச்சுவார்த்தை திடீரென இரத்து!

June 19, 2026
மஹர–கம்பஹா பகுதிகளில் அவசர நீர்விநியோகத் தடை!
செய்திகள்

மஹர–கம்பஹா பகுதிகளில் அவசர நீர்விநியோகத் தடை!

June 19, 2026
Next Post
வெள்ளவத்தையில் விபத்து; ஒருவர் பலி!

வெள்ளவத்தையில் விபத்து; ஒருவர் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.