Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு சுவிஸ் தமிழ் ஊடக மையம் கண்டனம்!

ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு சுவிஸ் தமிழ் ஊடக மையம் கண்டனம்!

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

யாழ் பிராந்திய ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன் தாக்கப்பட்டதை சுவிஸ் தமிழ் ஊடக மையம் வன்மையாக கண்டித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதும், படுகொலைசெய்யப்படுவதுமான சம்பவங்கள் அச்சத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

மேற்படி ஊடகவியளாலர் வீட்டுக்கு சென்ற தாக்குதல் தாரிகள் வீட்டை தீக்கிரையாக்கியுள்ளதோடு அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியும் மோட்டார் சைக்கிளை உடைத்தும் அவருக்கு பாரிய உயிர் அச்சுறுத்தலை மேற்கொண்டுள்ளார்கள்.

இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் நடக்காது இருக்க சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதோடு அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என சுவிஸ் தமிழ் ஊடக மையம் கேட்டுக்கொள்கிறது.

ஊடகவியலளர்களின் பாதுகாப்பிற்காக அனைத்துலக மட்டத்தில் “சுவிஸ் தமிழ் ஊடக மையம்” வலுவாக தனது குரலை கொடுக்கும் என்பதையும் இங்கு குறிப்பிடுகிறோம்.

நீண்ட காலமாக ஊடகவியலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஜனநாயக விரோத வன்முறை செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் இலங்கையின் ஊடக அமைச்சு முறையான நடவடிக்கைகளை எடுத்து ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உடன் உறுதிப்படுத்த உத்தரவாதம் வழங்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் இலங்கையில் ஊடகவியலாளர்கள், தாக்கப்படுவது, அச்சுறுத்தப்படுவது, படுகொலை செய்யப்படும் மிக மோசமான செயற்பாடுகள், உடன் நிறுத்தப்பட வேண்டும் என்பதை இந்த அறிக்கை மூலம் கேட்டுக்கொள்கிறோம்.

அரசாங்கம் இதுபோன்ற சம்பவங்களுக்குப் பின்னர் மௌனமாக இருப்பதை தொடர் கதையாக வைத்திருக்காமல் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்பதைக் கவனத்தில் கொண்டே ” சுவிஸ் தமிழ் ஊடக மையம்” குறிப்பிட்ட ஊடகவியலாளர் மீதான தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

நாட்டின் சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை; 353 பேர் பாதிப்பு
செய்திகள்

நாட்டின் சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை; 353 பேர் பாதிப்பு

June 15, 2025
மட்டு மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலய ஏற்பாட்டில் தற்கொலைகள் தொடர்பிலான விழிப்புணர்வு சைக்கிள் பவனி
செய்திகள்

மட்டு மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலய ஏற்பாட்டில் தற்கொலைகள் தொடர்பிலான விழிப்புணர்வு சைக்கிள் பவனி

June 15, 2025
இந்திய நடிகர் மோகன்லால் படப்பிடிப்பிற்காக இலங்கை விஜயம்
சினிமா

இந்திய நடிகர் மோகன்லால் படப்பிடிப்பிற்காக இலங்கை விஜயம்

June 15, 2025
மேலதிக நேரக் கொடுப்பனவு; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை
செய்திகள்

மேலதிக நேரக் கொடுப்பனவு; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

June 15, 2025
வாகன சாரதிகளுக்கு பொலிசாரின் அறிவுறுத்தல்
செய்திகள்

வாகன சாரதிகளுக்கு பொலிசாரின் அறிவுறுத்தல்

June 15, 2025
பட்டதாரிகள் அரசாங்க வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கக் கூடாது; விவசாய அமைச்சர் லால்காந்த
செய்திகள்

பட்டதாரிகள் அரசாங்க வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கக் கூடாது; விவசாய அமைச்சர் லால்காந்த

June 15, 2025
Next Post
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் கார் மீது துப்பாக்கி பிரயோகம்; உதவிப் பொலிஸ் அத்தியட்சகருடன் இணைந்து திட்டம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் கார் மீது துப்பாக்கி பிரயோகம்; உதவிப் பொலிஸ் அத்தியட்சகருடன் இணைந்து திட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.