பிரபல இந்திய நடிகர் மோகன்லால் விஸ்வநாதனும் மற்றொரு இந்திய நடிகரான குஞ்சாக்கோ போபனும் படப்பிடிப்பிற்காக இன்று இலங்கை வந்துள்ளனர்.
பேட்ரியோட்என்ற படத்தின் 3 நாட்கள் படப்பிடிப்பிற்காக குறித்த நடிகர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் 08 மொழிகளில் இந்த படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் கொச்சி நகரில் இருந்து இன்று (15) முற்பகல் 11.20 அளவில் சிறிலங்கள் விமான சேவைக்கு சொந்தமான UL-166 விமானம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளனர்.