Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாதுகாப்பு படை குறித்து ஜனாதிபதியின் புதிய திட்டம்!

பாதுகாப்பு படை குறித்து ஜனாதிபதியின் புதிய திட்டம்!

3 years ago
in முக்கிய செய்திகள்

ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க இராணுவத்தை பலப்படுத்தவும், பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவிக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கவும் விரும்புகின்றார் என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகின்றது.

இராணுவத் திட்டத்தின் பரந்த அளவுருக்கள், ஏற்கனவே அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி இந்த வரைவு சட்டத்தை உருவாக்க சட்ட வரைவாளர், அழைக்கப்பட வேண்டும் என்ற ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி பாதுகாப்பு படைகளின் பிரதானிக்கான கூடுதல் செயற்பாடுகளாக பாதுகாப்பு செயலாளருடன் இணைந்து பணியாற்றுதல் மற்றும் ஆயுதப்படைகளுக்கு மூலோபாய வழிகாட்டுதலை வழங்குவதில் உதவுதல். அமைச்சரின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு, பாதுகாப்புத் துறைக்கு பொறுப்பான செயலாளருடன் இணைந்து, ஆயுதப் படைகளின் எதிர்கால வளர்ச்சி உள்ளிட்ட பாதுகாப்பு உத்திகளை வகுக்க வேண்டும் என்பனவும் அடங்குகின்றன.

ஆயுதப் படைகளின் ஒருங்கிணைந்த கூட்டுப் பயிற்சிக்கான கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் ஆயுதப்படைகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான கொள்கைகளை வகுத்தல் என்பனவும் இந்த கூடுதல் செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்படவுள்ளன.

பாதுகாப்பு படைகளின் பிரதானி என்பது ஆயுதப்படைகளில் மிக முக்கியமான மற்றும் மிக உயர்ந்த நியமனமாகும். ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாக இருக்கும் ஜனாதிபதி, இந்த பதவிக்காக, இராணுவம், கடற்படை அல்லது விமானப்படை ஆகியவற்றில் ஒருவரை நியமிக்கும் அதிகாரம் பெற்றுள்ளார்.

அவர்கள் அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் பணியாற்ற தகுதியுடையவர்கள். பெரும்பாலும் இராணுவத்தைச் சேர்ந்த பதினொரு தளபதிகள் இந்தப் பதவியை இதுவரை வகித்துள்ளனர்.

ஜெனரல் ரொஹான் தலுவத்த, ஜெனரல் லயனல் பலகல்ல, அட்மிரல் தயா சந்தகிரி, எயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா, ஜெனரல் சரத் பொன்சேகா, எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, ஜெனரல் ஜகத் ஜயசூரிய, எயார் சீப் மார்ஷல் கோலித குணதிலக்க, ஜெனரல் கிருஷாந்த ரவி சில்வா, அட்மிரல் ரவி சில்வா. விஜேகுணரத்ன ஆகியோர் இந்த பதவியை வகித்துள்ளனர் .

2020இல் இருந்து ஜெனரல் சவேந்திர சில்வா இந்த பதவியை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
இலங்கையின் நீதித்துறை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்துள்ள கோரிக்கை!

இலங்கையின் நீதித்துறை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்துள்ள கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.