Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் அதிபர், ஆசிரியர்களை பாடசாலைகளுக்கு செல்லவேண்டாம் என்று வட்ஸப் செய்தி!

மட்டக்களப்பில் அதிபர், ஆசிரியர்களை பாடசாலைகளுக்கு செல்லவேண்டாம் என்று வட்ஸப் செய்தி!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இன்று (27) பாடசாலைகள் வழமைபோல் நடைபெறும் என்று கல்விஅமைச்சு நேற்று (26)அறிவித்திருந்த போதிலும் நாடளாவிய ரீதியில் அதிபர், ஆசிரியர்கள் தங்களுடைய போராட்டத்தை தொடர்ந்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வட்ஸப் குழுமங்களின் மூலம் இன்றைய தினம் அதிபர், ஆசிரியர்களை பாடசாலைகளுக்கு செல்லவேண்டாம் எனவும், முற்றுமுழுதாக கல்வி நடவடிக்கைகளை புறக்கணிக்க கோரியும் குறித்த சங்கங்களின் முக்கிய தரப்பினர் குரல்வழிச் செய்திகள் மூலம் பாடசாலைக்கு செல்லவிருந்த ஆசிரியர், அதிபர்களை ”வருவதை பிறகு பார்த்து கொள்ளலாம்” எனவும் தெரிவித்ததாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனடிப்படையில் இன்றைய தினம் கல்குடா கல்வி வளையத்தில் நடைபெறவிருந்த சமூக விஞ்ஞான போட்டியானது நிறுத்தப்பட்டு, பிற்போடப்பட்டுள்ளதுடன், செங்கலடி மத்தியக்கல்லூரியில் நடைபெறவிருந்த சமூக விஞ்ஞான போட்டியை நடாத்த வேண்டாம் என சில தரப்பினர் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேசமயம் மட்டக்களப்பு நகர், கிராம புறங்களில் உள்ள பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர்களினால் பாடங்கள் நடைபெறவில்லை என்றாலும், பாடசாலைகளில் ஆசிரியர் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் பாடசாலைகளுக்கு சமூகமளித்த மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா காலங்களில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், சிறிது சிறிதாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் உயர்ந்து வருகின்ற சூழலில் ஆசிரியர், அதிபர்களின் இந்த போராட்டம் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து நடத்தப்படுவதாகவும், இவ்வாறான சூழ் நிலையில் ஒரு மாணவனின் எதிர்காலம் பாதிக்கப்பட்டால் கூட அதற்கு சுயநலமாக சிந்திக்கும் அதிபர், ஆசிரியர் சங்கங்களின் இந்த செயற்பாடே காரணமெனவும் பெற்றோர் ஒருவர் எமது battinaatham ஊடகத்திற்கு கருத்து வெளியிட்டிருந்தது குறிப்பிடதக்கது.

தொடர்புடையசெய்திகள்

புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
செய்திகள்

புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

June 23, 2026
நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!
செய்திகள்

நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!

June 23, 2026
அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!
செய்திகள்

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!

June 23, 2026
கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு

June 23, 2026
வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!
செய்திகள்

வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!

June 23, 2026
ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை; பிரான்சில் இரு குழந்தைகள் உயிரிழப்பு!
செய்திகள்

ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை; பிரான்சில் இரு குழந்தைகள் உயிரிழப்பு!

June 23, 2026
Next Post
நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் கிராம அதிகாரிகள் சங்கம்!

நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் கிராம அதிகாரிகள் சங்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.