மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேசசபையின் ஆட்சி அதிகாரத்தினை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து சுயேட்சைக்குழு கைப்பற்றியுள்ளது.
பட்டிப்பளை பிரதேசசபையின் தவிசாளராக திரேஸ்குமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பட்டிப்பளை பிரதேச தவிசாளர் தெரிவுக்காக இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி சார்பாக கோபாலபிள்ளை சுரேந்திரன் (பட்டிப்பளை வட்டாரம்) முன்மொழியப்பட்டார். சுயேட்சை குழு (பந்து) சார்பாக இளையதம்பி திரேசகுமாரன், (அரசடித்தீவு வட்டாரம்) முன்மொழியப்பட்டார்.

வாக்கெடுப்பில் சுயேட்சைகுழு இளையதம்பி திரேசகுமார் 09, வாக்குகளும் தமிழரசுக்கட்சி கோபாலபிள்ளை சுரேஷ்குமார் 06, வாக்குகளும்(வீடு:06) பெற்றுக்கொண்டனர். தேசிய மக்கள் சக்தி 01, உறுப்பினர் நடுநிலை வகித்தார்.
பிரதி தவிசாளராக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி சார்பாக கனகநாயகம் கபில்ராஜ் (கொக்கட்டிச்சோலை வட்டாரம்) ஏகமனதாக தெரிவானார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் திரேஸ்குமார் தலைமையிலான சுயேட்சைக்குழுவும் இணைந்து பட்டிப்பளை பிரதேசசபையின் ஆட்சியதிகாரத்தினை கைப்பற்றியுள்ளது.
சுயேட்சைக்குழுவினை தலைமை தாங்கியுள்ள திரேஸ்குமார் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையானால் சுட்டுக்கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மட்டு. அம்பாறை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் கௌசல்யன் அவர்களின் சகோதரன் ஆவார்.














