Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு புதிய குடியேற்ற கிராமங்கள்; அமைச்சரவை அங்கீகாரம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு புதிய குடியேற்ற கிராமங்கள்; அமைச்சரவை அங்கீகாரம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் மற்றும் பிராந்திய பெருந்தோட்ட சங்கங்களால் நிர்வகிக்கப்படும் அரச தோட்டக் காணிகளில், தோட்டத் தொழிலாளர்கள் குடியிருக்கும் பகுதிகளை, உத்தியோகபூர்வ, புதிய குடியேற்றக் கிராமங்களாக அறிவிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் குடியிருக்கும் பகுதிகளை இனங்கண்டு, அந்தப் பகுதிகளை புதிய குடியேற்றக் கிராமங்களாக உத்தியோகபூர்வமாக்கும் சட்ட வரைபுக்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (18) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் மற்றும் பிராந்திய நிறுவனங்களின் மேற்பார்வையில், அரசினால் நிர்வகிக்கப்படும் தோட்டங்களுக்குள் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளை புதிய கிராமங்களாக பிரகடனப்படுத்தும் சட்டத்தை இயற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இந்த முயற்சியின் கீழ் தற்போதைய பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமைகளை பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், அதற்கான முன்மொழிவையும் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளார்.

இந்தநிலையில் பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து சட்டமியற்றும் செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்காக, பெருந்தோட்ட சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களை உள்ளடக்கிய குழுவொன்றை உருவாக்கவும் அவர் பரிந்துரைத்துள்ளார் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மண்சரிவு அபாயத்தால் மலையகம் செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை
செய்திகள்

மண்சரிவு அபாயத்தால் மலையகம் செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை

July 5, 2026
டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் டிப்பரை செலுத்திய சாரதி கைது
செய்திகள்

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் டிப்பரை செலுத்திய சாரதி கைது

July 5, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் இரு கைதிகள் உயிரிழப்பு
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் இரு கைதிகள் உயிரிழப்பு

July 5, 2026
தமிழகத் தலைவர்களை சந்தித்த பின்னணியில் சுயலாபம்; கஜேந்திரகுமார் குழுவினரை விமர்சித்துள்ள டக்ளஸ்
அரசியல்

தமிழகத் தலைவர்களை சந்தித்த பின்னணியில் சுயலாபம்; கஜேந்திரகுமார் குழுவினரை விமர்சித்துள்ள டக்ளஸ்

July 5, 2026
தொலைபேசி விற்பனை செய்யும் கடைகளுக்கான முக்கிய அறிவிப்பு
செய்திகள்

தொலைபேசி விற்பனை செய்யும் கடைகளுக்கான முக்கிய அறிவிப்பு

July 5, 2026
காணாமல் போன ஓஐசியின் துப்பாக்கி மீட்பு
செய்திகள்

காணாமல் போன ஓஐசியின் துப்பாக்கி மீட்பு

July 5, 2026
Next Post
பிள்ளையானின் கருத்துக்கள் வேடிக்கையாக உள்ளது; இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவிப்பு!

பிள்ளையானின் கருத்துக்கள் வேடிக்கையாக உள்ளது; இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.