Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஓரங்கட்டப்பட்டு மருவி வரும் கலைகளையும், கலைஞர்களையும் உயிர்ப்பூட்டுவதற்கான கலாசார சங்கம நிகழ்வு!

ஓரங்கட்டப்பட்டு மருவி வரும் கலைகளையும், கலைஞர்களையும் உயிர்ப்பூட்டுவதற்கான கலாசார சங்கம நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கின் அகல் இளையோர் மற்றும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் என்பன இணைந்து நடத்திய ஓரங்கட்டப்படு மருவி வரும் கலைகளையும் கலைஞர்களையும் உயிர்ப்பூட்டுவதற்கான கலாசார சங்கம நிகழ்வு கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் செவ்வாய்கிழமை(24.07.2024) நடைபெற்றது.

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி இந்துமதி ஹரிஹரதாமோதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் பல்கலைக்கழக கலைத்துறை விரிவுரையாளர்கள், கலைத்துறை மாணவர்கள், அகல் இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் விழுது ஆற்றல் மேம்பாட்டு மைய பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கனகசிங்கம், பாரம்பரியக் கலைகள் இன்றைய சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. பாரம்பரியக் கலைகளைக் கற்பதில் நமது மாணவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். காரணம் பாரம்பரியக் கலைகளைக் கற்று அதன்மூலம் தொழில் வாய்ப்பைப்பெறுவது என்பது சிக்கலாக இருக்கிறது. அதனோடு சமூக அங்கீகாரம் கிடைப்பதில்லை இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில்தான் பாரம்பரியக் கலைகள் காணப்படுகின்றன.

ஆனால், வெளிநாடுகளில் நிலைமை வேறு. அங்கு இத்தகைய பாரம்பரியக் கலைகளுக்கூடான ஆற்றுகைகளுக்கு முன்னுரிமை அளிப்பார்கள், காரணம் உளவியல் ரீதியாக உள் சமாததானத்தையும் நிம்மதியையும் வழங்குகின்ற ஒரு அம்சமாக அவர்கள் பாரம்பரியக் கலைகளைப் பார்க்கிறார்கள்” என்றார்.

நிகழ்வில் பாரம்பரியங்களைப் பிரதிபலிக்கும் தமிழ் வாழ்த்து, நடனம், மறுமலர்ச்சி நாட்டுக்கூத்து, கிழக்கின் அகல் இளையோர் குழுவினரின் அனுபவப் பகிர்வு, ஓரங்கட்டப்பட்டு மருவி வரும் கலைஞர்களின் கலைகளின் சவால்களும் சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரங்களும் கலந்துரையாடல், இளையோருக்கான சான்றிதழ்கள் வழங்கல், நாட்டார் பாடல்கள் சமர்ப்பணம், பறை இசை, ஆதிவாசிகளின் பாரம்பரியக்கலைப் படைப்பு ஆகியவற்றோடு பாரம்பரிய உணவுகளை ருசித்துப் பார்க்கும் அறுசுவை நிகழ்வும் இடம்பெற்றது.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைகுழியில் மேலும் 14 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி புதைகுழியில் மேலும் 14 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

June 17, 2026
எரிபொருள் விலை எப்போது குறையும்? பதிலளித்தார் அனில் ஜயந்த!
செய்திகள்

எரிபொருள் விலை எப்போது குறையும்? பதிலளித்தார் அனில் ஜயந்த!

June 17, 2026
திருமண மண்டபத்தில் மோதல்; பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!
செய்திகள்

திருமண மண்டபத்தில் மோதல்; பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!

June 17, 2026
ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!
உலக செய்திகள்

ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!

June 17, 2026
அஸ்வெசும் பயனாளிகளுக்கு ஜூன் மாத கொடுப்பனவு நாளை வங்கி கணக்குகளில்!
செய்திகள்

அஸ்வெசும் பயனாளிகளுக்கு ஜூன் மாத கொடுப்பனவு நாளை வங்கி கணக்குகளில்!

June 17, 2026
கண்டி – தெல்தெனியாவில் காரிலிருந்து பெண் சடலம் மீட்பு; விசாரணை ஆரம்பம்!
செய்திகள்

கண்டி – தெல்தெனியாவில் காரிலிருந்து பெண் சடலம் மீட்பு; விசாரணை ஆரம்பம்!

June 17, 2026
Next Post
அகில இலங்கை சமாதான நீதவனாக முஹம்மது ஹனிபா அனஸ்!

அகில இலங்கை சமாதான நீதவனாக முஹம்மது ஹனிபா அனஸ்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.