Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முப்படை வீரர்களுக்கு வழங்கப்படவுள்ள கூப்பன்!

முப்படை வீரர்களுக்கு வழங்கப்படவுள்ள கூப்பன்!

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

படைவீரர்களின் கோரிக்கைக்கமைய கூப்பன் அட்டை கொடுப்பனவை ஜனவரி மாதம் முதல் அனைத்து முப்படை வீரர்களுக்கும் பணமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் வியாழக்கிழமை (29) இடம்பெற்ற செய்தியாளர் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

முப்படைகளின் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஏனைய தரங்களில் இருக்கும் வீர்ரகளுக்கு அரசாங்கம் கூப்பன் அட்டை கொடுப்பனவு வழங்கி வருகிறது. இந்த கொடுப்பனவு சில அதிகாரிகளுக்கு மூன்றுவேளை உணவாகவும் மேலும் சிலருக்கு அவர்களின் சம்பளத்துடன் இணைத்து பணமாகவும் வழங்கப்படுகிறது. இதற்காக அரசாங்கம் பாரியதொரு தொகையை ஒதுக்கி வருகிறது. இ்வ்வாறான கூப்பன் அட்டை கொடுப்பனவு வெளிநாடுகளில் பணமாக வழங்குவதையும் எங்களுக்கு அறிந்துகொள்ள கிடைக்கிறது.

யுத்தக்காலத்தில் படையினருக்கு இந்த கொடுப்பனவு உணவாக மாத்திரமே வழங்க முடியுமாகி இருந்தது. அவர்களுக்கு தேவையான போஷாக்கு யுத்த முகாம்களிலேயே வழங்கப்பட்டது. என்றாலும் தற்போது யுத்த நிலைமை இல்லாததால் அந்த நிவாரணத்தை அவர்களுக்கு வழங்கி வருகிறாேர். அதன் பிரகாரம் முப்படைகளின் அதிகாரி ஒருவருக்கு நாள் ஒன்றுக்காக 1161.56 சதமும் ஏனைய தரத்தில் இருக்கும் வீரர்களுக்கு நாளாந்தம் 967.53சதம் அவர்களினட உணவுக்காக ஒதுக்கி இருக்கிறோம்.

என்றாலும் ஜனவரி மாதம் முதல் அனைத்து முப்படை வீரர்களுக்கும் இந்த கூப்பன் அட்டை கொடுப்பனவை பணமாக வழங்க தீர்மானித்திருக்கிறோம். நாள் ஒன்றுக்கு 3 வேளை உணவுக்கு செலவாகும் தொகையை கணக்கிட்டு, இதனை வழங்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். உயர் அதிகாரிகள் அல்லாத வேறு தரங்களில் இருக்கும் படைவீரர்களின் கோரிக்கைக்கமையவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இராணுவ வீரர்களுக்கு மாத்திரம் வருடாந்தம் இந்த கூப்பன் நடவடிக்கைக்காக 33பில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. அதன்போது பல்வேறு முறைகேடான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதனால் தற்போது இந்த பணத்தை முப்படையினருக்கும் பணமாக அவர்களின் கைகளுக்கு வழங்குவதன் மூலம் அவர்களும் திருப்தியடைவார்கள். மோசடிகளுக்கும் இடம் இல்லாமல் போகிறது. எனவே ஜனவரி மாதம் முதல் நாட்டில் இருக்கும் அனைத்து முப்படை வீரர்களுக்கும் இந்த கூப்பன் அட்டை கொடுப்பனவை பணமாக அவர்களின் கைகளுக்கு வழங்க முடியுமாகும் என நாங்கள் நம்புகிறோம் என்றார்.

Tags: armyBattinaathamnewsSrilankasrilankanewsகூப்பன்முப்படை

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக ஆதாரம் இல்லை – கனடாவில் திறக்கப்பட்ட நினைவு சின்னத்திற்கு அரசு அதிருப்தி
செய்திகள்

இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக ஆதாரம் இல்லை – கனடாவில் திறக்கப்பட்ட நினைவு சின்னத்திற்கு அரசு அதிருப்தி

May 14, 2025
மெக்சிக்கோவில் மேயர் வேட்பாளர் உட்பட நால்வர் சுட்டுக்கொலை
உலக செய்திகள்

மெக்சிக்கோவில் மேயர் வேட்பாளர் உட்பட நால்வர் சுட்டுக்கொலை

May 14, 2025
84 ஆண்டுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட ஹிட்லரின் முக்கிய ஆவணங்கள்
செய்திகள்

84 ஆண்டுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட ஹிட்லரின் முக்கிய ஆவணங்கள்

May 14, 2025
மட்டு சிவில் சமூக செயற்பாட்டாளர் செல்வகுமார் மீது இனம் தெரியாதோர் வழி மறித்து தாக்குதல்
காணொளிகள்

மட்டு சிவில் சமூக செயற்பாட்டாளர் செல்வகுமார் மீது இனம் தெரியாதோர் வழி மறித்து தாக்குதல்

May 14, 2025
திலீபனின் நினைவிடத்தில் இருந்து ஆரம்பமான தமிழினப் படுகொலையை நினைவூட்டும் ஊர்திப் பவனி
செய்திகள்

திலீபனின் நினைவிடத்தில் இருந்து ஆரம்பமான தமிழினப் படுகொலையை நினைவூட்டும் ஊர்திப் பவனி

May 14, 2025
இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை; நினைவுச்சின்னம் திறப்புக்கு அலி சப்ரி எதிர்ப்பு
செய்திகள்

இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை; நினைவுச்சின்னம் திறப்புக்கு அலி சப்ரி எதிர்ப்பு

May 14, 2025
Next Post
ஆசிரியர்களின் குறைந்தபட்ச சம்பளமாக 55,000 வழங்கப்படும்; கல்வி அமைச்சர்!

ஆசிரியர்களின் குறைந்தபட்ச சம்பளமாக 55,000 வழங்கப்படும்; கல்வி அமைச்சர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.